அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
தொழிற்நுட்பம் மற்றும் அலுவலக பிரிவில் பயோமெட்ரிக்கை காரணம் காட்டி விடுமுறைகளை ரத்து செய்வது, தலைமையகத்தில் பெண் ஊழியருக்கு விடுப்பு போட்டு ஊதியம் பிடிப்பதை கண்டித்து புதனன்று (ஜூன் 4) பல்லவன் இல்லம் முன்பு அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் போக்குவரத்து கழக தலைவர் ஆர்.துறை தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பொதுச்செயலாளர் தயானந்தம், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு மாநில குழு உறுப்பினர் மணிமேகலை உள்ளிட்டோர் உரையாற்றினர்.
நெமிலியில் கலைஞர் 102வது பிறந்தநாள் விழா
கலைஞர் 102வது பிறந்தநாள் விழா செவ்வாயன்று (ஜூன் 3) நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேல் தலைமையில் நெமிலி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. முன்னதாக அரக்கோணம்-நெமிலி சாலையில் திமுகவினர் ஊர்வலமாக வந்து முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை பொருட்கள், விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு, அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நீர் தேக்க தொட்டி கட்டும் பணி: மேயர் ஆய்வு
காஞ்சிபுரம் மாநகராட்சியில் நடைபெறும் குடிநீர் மேம்பாட்டு பணியின் ஒரு பகுதியாக 3 லட்சம் லிட்டர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுமானப் பணி 51 வது வட்டம் விஷ்ணு நகர் பகுதியில் நடைபெற்று வருகிறது.அதனை திங்களன்று காஞ்சிபுரம் மாநாகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆய்வு செய்தார் . அப்போது உதவி பொறியாளர் பன்னீர்செல்வம் மற்றும்பணி மேற்பார்வையாளர்கள் உடன் இருந்தனர்.
அரசு பேருந்து பழுதாகி மேம்பாலம் சுவற்றில் மோதி விபத்து காஞ்சிபுரம்
, ஜூன் 4- காஞ்சிபுரம் அருகே ரயில்வே மேம்பாலத்தின் மேல் சென்று கொண்டு இருக்கின்ற போது அரசு பேருந்து பழுதானதால் ஆகி நிலை தடுமாறி சுவற்றில் மோதி விபத்து ஏற்பட்டது. திருவள்ளூர் பணி மணியை சேர்ந்த அரசு போக்குவரத்துக் கழக பேருந்து காஞ்சிபுரத்திலிருந்து பூந்தமல்லிக்கு புதனன்று மதியம் 12 மணிக்கு அருகில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து ஓட்டுநர் கார்த்திகேயன்(51) மற்றும் நடத்துநர் வினோத் (29) ஆகியோர் பணிபுரிந்த நிலையில் 40 பயணிகளுடன் புறப்பட்டது. பேருந்து காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலைய மேம்பாலத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென சத்தம் கேட்ட நிலையில் பேருந்து முன் பக்க ஆக்சில் உடைந்து பேருந்து கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி தடுப்பு சுவர், மீது வேகமாக மோதியது. இதில் பேருந்தில் பயணித்த 8 பேர் சிறு காயங்கள், தசை பிடிப்பு உள்ளிட்ட நிலைகளில் காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடத்துநரின் கால் மற்றும் மற்றொரு ஊழியரின் முதுகெலும்பு உள்ளிட்டவை பாதிப்பு அடைந்ததாக கூறப்படுகிறது. பேருந்து விபத்து குறித்து காயம் அடைந்த பெண் பயணி ஒருவர், ஓட்டுநர் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் செலுத்தியதாக தெரிவித்தார். விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களை பார்க்க வந்த போக்குவரத்துக் கழக அதி காரிகள் விபத்து குறித்து கேட்ட போது, எதுவும் கூற இயலாது என தெரிவித்து விட்டனர். அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படவில்லை, பணிகள் குறித்து எந்த கவலையும் இன்றி பழைய பேருந்துகளேயே நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது. போக்குவரத்து காவல்துறையின் விதிகளின்படி பேருந்து ஒலிமுகமது பேட்டை வழியாக சென்று தேசிய நெடுஞ்சாலை அடைய வேண்டும் ஆனால் போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் இதை கடை பிடிப்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிகழ்ச்சி
நூல்கள் வெளியீடு: சாகித்ய அகாதெமி விருதாளர் ஆயிஷா நடராசனின் ‘அமர்த்தியாவின் ஆத்திச்சூடி’, சரவணன் பார்த்தசாரதியின் ‘சுற்றுச்சூழல் தவறுகளும் பாடங்களும்’ நூல்கள் வெளியீடு - மாலை 6 மணி, எண் 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, பாரதி புத்தகாலயத்தின் அரும்பு அரங்கு - பங்கேற்பு: எழுத்தாளர்கள் ஆதி வள்ளியப்பன், யெஸ்.பாலபாரதி மற்றும் பலர்- ஏற்பாடு: பாரதி புத்தகாலயம்
கார் மோதி பெண் பலி
சென்னை, ஜூன் 4- சென்னை புது வண்ணாரப் பேட்டை பகுதியைச்சேர்ந்த வர் வளர்மதி (40). இவர், திரு வல்லிக்கேணி பகுதியில் உள்ள ஒரு புத்தகக் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். வளர்மதி செவ்வாய்க்கிழமை இரவு வேலை முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். அவர், திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் நடந்து செல்லும்போது, அங்கு வந்த ஒரு சொகுசு கார் திடீரென வளர்மதி மீது மோதியது. விபத்தில் பலத்தக் காயமடைந்த வளர்மதி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது தொடர்பாக அந்த காரை ஓட்டி வந்த அசோக் பதானை போலீசார் கைது செய்தனர்.
விமான நிலைய ஓடுபாதைகளில் பறவைகளை விரட்ட புதிய கருவி
சென்னை, ஜூன் 4- சென்னை விமான நிலைய ஓடுபாதைகளில் பறவைகளை விரட்ட புதிய கருவி செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. சென்னை விமான நிலை யத்தில் இருந்து தினந்தோறும் சுமார் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு விமானங்கள், 400-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான பயணி களின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்து உள்ளது. தினமும், 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். சென்னை விமான நிலை யத்தில் உள்நாட்டு முனையம் டெர்மினல் 1-ல் செயல்பட்டு வருகிறது. டெர்மினல் 2-ல் தற்போது விமான நிலைய விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. டெர்மினல் 3-ல் சர்வ தேச விமான நிலையம் வருகை பகுதியாகவும், டெர்மினல்-4 சர்வதேச புறப்பாடு பகுதியாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை விமான நிலைய ஓடுபாதை பகுதிகளில், விமான போக்குவரத்துக்கு இடையூறாக, பறக்கும் பறவைகளை விரட்டு வதற்கு, “தண்டர் பூம்ஸ்” என்ற இடி ஓசை ஒலி எழுப்பக்கூடிய, புதிய கருவிகள் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதுவரையில் பட்டாசுகள் வெடித்து ஒலி எழுப்பி, பறவை கள் விரட்டப்பட்டு வந்தன. அதில் 100விழுக்காடு பலன் கிடைக்காததால், இந்த புதிய முறை செயல்பாட்டிற்கு வந்துள்ளது.