சென்னை, மே 11- வடசென்னையில் கொளத்தூர் சட்ட மன்ற தொகுதிகுட்பட்ட தொகுதி பெரியார் நகரில் கட்டப்பட்டு வரும் சிறப்பு மருத்துவ மனை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
ரூ.110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,12,890 சதுர அடி (19,778 ச.மீ) பரப்பளவில் தரை தளம் மற்றும் 6 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சிறப்பு மருத்துவ மனை கட்டப்படுகிறது. கொளத்தூரில் புதிய சிறப்பு மருத்துவமனை கட்ட முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மருத்துவமனையின் தரைத்தளத்தில் தீவிர சிகிச்சை பிரிவுகள், நவீன சலவைய கம், மத்திய கிருமி நீக்கல் துறை, வாகனம் நிறுத்துமிடம் ஆகியவை இடம் பெறுகின்றன.
அதிதீவிர சிகிச்சை பிரிவுகள்
முதல் தளத்தில் பிரசவ வார்டுகள், மறுவாழ்வு வார்டுகள், ரத்த வங்கி, 3 அறுவை சிகிச்சை அரங்கங்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வார்டுகள் அமைக்கப்படுகின்றன. இரண்டாவது மற்றும் மூன்றாவது தளத்தில் முதலமைச்ச ரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட வார்டுகள், மருத்துவ வார்டுகள், தனி அறைகள் மற்றும் முழு உடல் பரிசோதனை பிரிவு, குழந்தை கள் வார்டு, பிரசவ வார்டு, தீவிர மற்றும் அதிதீவிர சிகிச்சை பிரிவுகள் அமைக்கப் படுகின்றன. நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் தளங்களில் சிறப்பு புறநோயாளிகள் பிரிவு, ஆய்வகம், நீரிழிவு வார்டு, இரையகக் குடலியவியலுக்கான வார்டுகள், இதயவி யல் வார்டுகள், கேத் ஆய்வகம் மற்றும் நான்கு அறுவை சிகிச்சை அரங்கங்கள், புற்றுநோய் வார்டு, கூட்டரங்கம் ஆகியவை அமைக்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள்
மேலும் இக்கட்டடத்தின் அனைத்து தளங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பிடம், பொது கழிப்பிடம், நான்கு மின்தூக்கிகள், 3 படிக்கட்டுகள், சாய்வு தளம், கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி, தீயணைப்பு உபகரணங்கள் போன்ற பல்வேறு வசதிகளுடன் கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அ.சவுந்தரராசன் பெரியார்நகர் அரசு மருத்துவமனையை நவீன மருத்துவ வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.