tamilnadu

img

தனியார் பள்ளியை விட அரசு பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக பாடம் நடத்துகிறார்கள்

தனியார் பள்ளியை விட அரசு பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக பாடம் நடத்துகிறார்கள்

மாநகராட்சி பள்ளி  மாணவி ஷோபனா பேட்டி

சென்னை, மே 16- 10ஆம் வகுப்பு தேர்வில் சென்னை மாநக ராட்சி பள்ளிகள் அளவில் 2ஆம் இடம் பிடித்து மாணவி சோபனா சாதனை படைத்துள்ளார். பழைய வண்ணாரப் பேட்டை டிஎச் ரோடு புத்தா தெருவில் சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. தண்டை யார்பேட்டை அஜீஸ் நகர் பகுதியைச் சேர்ந்த நாட்டு மருந்து கடை வியாபாரி ஆதிகேசவன் - மகேஸ்வரி தம்பதியின் மகள் ஷோபனா 500க்கு 491 மதிப்பெண்கள் பெற்று மாநகராட்சி பள்ளி கள் அளவில் 2ஆம் இடத்தை யும், தான் பயின்ற பள்ளியில் முதலிடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார். அந்த மாணவிக்கு ஆசி ரியர்களும், பெற்றோரும், சக மாணவிகளும் இனிப்பு வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் மாணவி ஷோபனா செய்தியாளர்க ளிடம் கூறுகையில், தனது தந்தை தண்டையார் பேட்டை பகுதியில் நாட்டு மருந்து கடை நடத்தி வருவதாகவும், பள்ளிக் கட்ட ணம் செலுத்த முடியாத காரணத்தால் தனியார் பள்ளியில் இருந்து மாநகராட்சி பள்ளியில் சேர்ந்ததாகவும் தெரி வித்தார். மேலும் தனியார் பள்ளியை விட அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் மிகச் சிறப்பாக பாடம் நடத்து வதாகவும் தெரிவித்த அவர், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் புரியும்படி பாடங்களை நடத்துவதோடு அடிக்  கடி தேர்வுகள் நடத்தி பரிசு வழங்கி ஊக்கமளித்த தாகவும் தெரிவித்தார்.