தமிழக அரசின் அம்பேத்கர், பெரியார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது திராவிட இயக்க ஆய்வாளரும், எழுத்தாளருமான க.திருநாவுக்கரசுவிற்கும், சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சந்துருவுக்கு டாக்டர் அம்பேத்கர் விருதும் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
விருதுடன் பரிசுத்தொகை ரூ.5 லட்சம், தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வருகிற திருவள்ளூர் தினத்தன்று (ஜனவரி.15) வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடந்த காலங்களில் பரிசுத்தொகை ரூ.1 லட்சமாக இருந்தது தற்போது 5 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.