சென்னை, ஜூன் 25- 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் செவ்வாய் கிழமை கேள்வி நேரத்திற்கு பிறகு, இளை ஞர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பாக விதி 110-ன் கீழ் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது பேசிய முதலமைச்சர், “இளை ஞர் எதிர்காலத்தை மனதில் வைத்து திட்டங் களை தீட்டி வருவது திமுக ஆட்சியின் தனித்தன்மை. இளைய சக்தியை ஆக்கப் பூர்வமாக பயன்படுத்திக் கொள்ளும் வகை யில் வேலைவாய்ப்புகளை உருவாக்கு வதில் மிக மிக கவனமாக செயல்பட்டு வருகிறோம்.
அரசுத் துறையில் நேரடி நியமனம்
தொழில் வளம் நிறைந்த தமிழகத்தை உரு வாக்கிடவும், அதன்மூலம் இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்றிடவும் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறோம். அடுத்த தேர்தலை அல்ல, அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கும் அரசு திமுக அரசு. இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி, சீரு டைப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் என தேர்வு முகமைகள் வாயி லாக 32 ஆயிரத்து 774 நபர்களுக்கு அரசுத் துறைகளில் நேரடி பணி நியமனங்கள் வழங்கப்பட்டன.
3 ஆண்டுகளில் 65 ஆயிரம் பேருக்கு அரசு வேலை!
அதேபோல், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் போன்ற பல்வேறு அரசு அமைப்புகளில் 32 ஆயிரத்து 709 இளைஞர்கள் பணிநியமனம் பெற்றனர். மொத்தம் 65 ஆயிரத்து 483 இளைஞர் களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அரசுத் துறைகளில் மட்டுமல்லாது, பெருந்தொழில் மற்றும் குறு, சிறு நிறு வனங்களின் மூலமாகவும் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளோம். உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் கிடைக்கப் பெற்ற பெரும் முதலீடுகள் காரணமாகவும் லட்சக்கணக் கான வேலைவாய்ப்புகள் கடந்த 3 ஆண்டு களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதை வெறும் வார்த்தையாக அல்ல, ஆதாரங்களோடு தான் தெரிவிக்கிறேன்.
77 லட்சம் இளைஞர்களுக்கு வேலை!
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் அமைப்பு சார்ந்த தனியார் துறைகளில் உரு வாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்த புள்ளி விவரங்கள் ஒன்றிய அரசின் தொழி லாளர் வைப்பு நிதி நிறுவனத்தின் மூலம் பெறப்பட்டது. இது ஒன்றிய அரசின் தொழி லாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்ச கத்தின் கீழ் செயல்படும் ஓர் அமைப்பாகும். இந்த நிறுவனத்தின் தரவுகளின்படி, கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 77 லட்சத்து 78 ஆயிரத்து 999 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களுக்குத் தொழிலாளர் வைப்பு நிதி கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளன.
தனியார் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலை
இதுமட்டுமின்றி, என்னுடைய கனவுத் திட்டம் என்று நான் எப்போதும் பெருமை யோடு குறிப்பிடக்கூடிய “நான் முதல்வன் திட்டம்” மூலமாகச் சிறப்பு பயிற்சிகள் தரப்பட்டு வருகிறது. இதன் மூலம் படித்த இளைஞர்களின் திறன்கள் மேம்படுத்தப் பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலமாக இதுவரை 3 லட்சத்து 6 ஆயிரத்து 459 நபர் களுக்குத் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதே போல, தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையின் மூலமாக நடத்தப்பட்ட சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக கடந்த 3 ஆண்டுகளில் 2 லட்சத்து ஓராயிரத்து 596 இளைஞர்களுக்கு தனியார் நிறு வனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டது. இந்த இரண்டையும் சேர்த்து, தமிழக அரசின் முயற்சியினால், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 5 லட்சத்து 8 ஆயிரத்து 55 தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2026-க்குள் 75 ஆயிரம் பேருக்கு அரசுப் பணி
அரசுப் பணியினை எதிர்நோக்கி இருக்கும் ஆயிரக்கணக்கான தமிழக இளை ஞர்களுக்குத் தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தியினை பேரவையில் தங்கள் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வரும் ஜனவரி 2026-க்குள், அதாவது இன்னும் 18 மாதங்களுக்குள் பல்வேறு அரசுப் பணியிடங்களுக்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பி எஸ்சி) மூலமாக 17 ஆயிரத்து 595 பணி யிடங்களும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 19 ஆயிரத்து 260 ஆசிரியப் பணி யிடங்களும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 3 ஆயிரத்து 041 பணி யிடங்களும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 6 ஆயிரத்து 688 பணியிடங்களும் நிரப்பப்படும். அதாவது வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் மொத்தம் 46 ஆயிரத்து 584 பணியிடங்கள் நிரப்பப்படும்.
இது தவிர, சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளில் காலியாக இருக்கக்கூடிய 30 ஆயிரத்து 219 பணி யிடங்களும் நிரப்பப்படும். இவற்றை மொத்த மாக சேர்த்துப் பார்க்கையில், 75 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் 2026 ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.