tamilnadu

தங்கக் காசு புதையல் எனக்கூறி மோசடி செய்த 6 பேர் கைது

விழுப்புரம்,டிச.31- செப்பு காசை தங்க காசு புதையல் எனக் கூறி  ரூ.50 ஆயிரத்தை ஏமாற்றி மோசடி செய்த 6-பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை சேர்ந்த துரைக்கண்ணு, வயது -51, இவர் நடமாடும் பஞ்சர் கடை நடத்தி வருகிறார்.

இவர், ஒரு மாதத்திற்கு முன்பு, கீழ்புத்துப்பட்டு பகுதியில் ஜே.சி.பி.,வாக னத்திற்கு பஞ்சர் ஒட்டியபோது, அதன் ஓட்டுநர் தனது நண்பர்களுக்கு தங்கக் காசு புதையல் கிடைத்துள்ளது என கூறி நண்பர்களை அறிமுகப்படுத்தினார். அப்போது அவர்கள் மாதிரிக்காக ஒரு கிராம் தங்கக் காசை துரைக்கண்ணு இடம் கொடுத்தனர், மீண்டும் ஒரு வாரத்திற்கு பின் துரைக்கண்ணுவை  செல்போனில் தொடர்பு கொண்டு அந்த கும்பல் இன்னும் தங்கக்காசு புதையல் கிடைத்துள்ளது ரூ 50,000 கொடுத்தால் தங்கக் காசு தருவதாக கூறினர், அதனை நம்பி துரைகண்ணு அந்த கும்பலிடம் ரூ 50 ஆயிரத்தை கொடுத்து தங்க காசு வாங்கி சென்றார், அந்த தங்க காசுகளை சோதனை செய்தபோது அனைத்தும் போலி யானது என தெரியவந்தது, உடனடியாக துரைக்கண்ணு அந்த கும்பலை மீண்டும் செல் போனில்  தொடர்பு கொண்டார், ஆனால்  முடியவில்லை,

இதுகுறித்து அவர்  விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பா ளரிடம் புகார் மனு கொடுத்தார் .இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி சுனில் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர், இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு துரைக்கண்ணுவை மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்ட அந்த கும்பல் உன்னிடம் புதையல் நாணயத்தை மாற்றி கொடுத்து விட்டோம், மீண்டும் 2 லட்சம் ரூபாயுடன் கோட்ட குப்பம் ரவுண்டானா அருகே வந்தால் ரூ 10 லட்சம் மதிப்பிலான ஒரிஜினல் தங்க காசு களை கொடுப்பதாக கூறினர். இது குறித்து துணைக்கண்ணு அளித்த தகவலின் பெயரில் டிஎஸ்பி தலை மையிலான தனிப்படை போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரித்தனர்,

விசாரணையில் புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அடுத்த தமிழக பகுதியான அம்மணக்குப்பம் தர்மலிங்கம் வயது 65, இவரது மகன் வெங்கடேசன் (34),  ஜாஸிம் (30),  முரளி (48),  ஆனந்த் (35),  சுரேஷ்  (38) ஆகியோர் என தெரிய வந்தது. மேலும் தர்மலிங்கம் தலைமையில் அந்த கும்பல் புதுச்சேரி, விழுப்புரம், திரு வண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் புதையல் இருப்பதாக கூறி மோசடி யில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது, கோட்டகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து தர்மலிங்க உள்ளிட்ட 6- பேரை கைது செய்து, அவர்கள் வைத்திருந்த செப்பு நாணயங்களை பறிமுதல் செய்த னர், கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.