tamilnadu

img

ஜூன் முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்: தமிழக அரசு

சென்னை:
ஜூன் மாதம் 1ம் தேதி முதல் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.கொரோனா பரவலைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனைக் கருத்தில் கொண்டு மீன்பிடி தடைக் காலத்தை 61 நாட்களிலிருந்து 47 நாட்களாகக் குறைக்க வேண்டுமென மீனவர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.இதையடுத்து தமிழகம், புதுச்சேரி அரசுகள் மற்றும் மீனவர் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று மத்திய மீன்வள அமைச்சகம், கிழக்கு கடற்கரை பகுதி மீனவர்களுக்கான வங்கக் கடல் மீன்பிடி தடை காலத்தின் அளவை 61 நாட்களிலிருந்து 47 நாட்களாகக் குறைத்து உத்தரவிட்டுள்ளது.அதன்படி தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1ஆம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள விசைப் படகு மீனவர்கள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;