சென்னை, ஏப். 12 - தென்சென்னை மக்கள வைத் தொகுதி வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்க பாண்டியனுக்கு, சித்தாலப் பாக்கம் கிராம மக்கள் ஆரஞ்சு பழ மாலை அணி வித்து வரவேற்றனர். சோழிங்கநல்லூர் சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட பெரும்பாக்கம், ஒட்டியம் பாக்கம், சித்தாலப்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் வெள்ளியன்று (ஏப்.12) வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வாக்கு சேகரித்தார்.
இந்த வாக்கு சேகரிப்பின்போது திமுக சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சரு மான மா.சுப்பிரமணியன், எஸ்.அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு மக்களவை உறுப்பினரும் ஒரு ஊராட் சியை தேர்ந்தெடுத்து, அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் திட்டத்தின் கீழ், தமிழச்சி தங்கபாண்டி யன், சித்தாலப்பாக்கம் கிரா மத்தை தத்தெடுத்திருந்தார்.
இந்த கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க சென்ற அவருக்கு ஊர் மக்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அவர், சித்தாலப்பாக்கம் கிரா மத்தை தத்தெடுத்து, திறந்த வெளி கிணறு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, உயர் மின் கோபுர விளக்குகள் அமைத்துள்ளேன். குளங் கள் சீரமைத்து, பள்ளிக் கழி வறை கட்டிடம் கட்டியுள் ளேன்.
தொகுதிக்குள் உள்ள 7 ஊராட்சிகளில் முதன் மையானதாக சித்தாலப் பாக்கம் ஊராட்சி மாறி யுள்ளது. ஊர் மக்கள் அளிக் கும் வரவேற்பை பார்க்கும் போது, நமது வெற்றி பெறு வது உறுதியாகிறது என்றார். திமுக ஒன்றியச் செயலா ளர் வெங்கடேசன், ஊராட்சி மன்றத் தலைவர் ரவி, சிபிஎம் பகுதிச் செயலாளர் ப.ஜெயவேல் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.