tamilnadu

இடையூறின்றி இறுதி ஊர்வலங்கள்: விதிகளை வகுக்க அரசுக்கு உத்தரவு

சென்னை,டிச.13- பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இறுதி ஊர்வலங்கள் நடத்துவது தொடர்பாக விதிகளை வகுப்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு, காவல் துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் நடந்த இறுதி ஊர்வலத்தின் போது சாலையில் வீசப்பட்ட மாலை இரு சக்கர வாகனத்தில் சிக்கி ராஜ்கமல் என்ற மென்பொறியாளர் ஒருவர் தாய்  கண்முன்னே பலியானார். இந்த சம்ப வத்தை சுட்டிக்காட்டி இறுதி ஊர்வ லங்களை அமைதியான முறையில் நடத்த விதிகள் வகுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பண்ருட்டியை  சேர்ந்த அன்புச்செல்வன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை  நீதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

அந்த கடிதத்தின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் பொது மக்களுக்கு இடையூறு இல்லா மல், போக்குவரத்துக்கு தடை ஏற்படுத் தாமல் இறுதி ஊர்வலங்கள் அமை தியான முறையில் நடத்துவதற்கான விதிகள் வகுப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கு தொடர் பான விளக்கங்களை வழங்கும்படி தமிழ்நாடு அரசுக்கும், காவல் துறைக் கும் உத்தரவிட்டு விசாரணையை வரு கிற பிப்ரவரி 6 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.