நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர், தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், அவரது தம்பி சேகர் உள்பட 3 பேர் சேர்ந்து மிரட்டி எழுதி வாங்கியதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில் அவரது முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில், கேரளாவில் தலைமறைவாக இருந்த விஜயபாஸ்கரை, தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.