tamilnadu

img

ஏபிவிபி முன்னாள் நிர்வாகி மருத்துவர் சுப்பையா சண்முகம் கைது

அண்டை வீட்டு பெண்ணின் வாசலில் சிறுநீர் கழித்த முன்னாள் ஏபிவிபி நிர்வாகி சுப்பையா சண்முகம் கைது செய்யப்பட்டுள்ளார். 
2020ம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தன்வீட்டின் வாசலில் சிறுநீர் கழித்ததாக பெண் ஒருவர் அளித்தார் இதுகுறித்த சிசிடிவி வீடியோ வெளியாகி அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் குற்றம் சாட்டப்பட்ட ஏபிவிபி முன்னாள் நிர்வாகியான மருத்துவர் சுப்பையா சண்முகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இன்று இந்த புகாரின் பேரில் ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தலைவரும், மருத்துவருமான சுப்பையாவை  பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆதம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். 
ஏற்கனவே தஞ்சை பள்ளி மாணவி விவகாரத்தில் முதலமைச்சர் வீடு முன் ஆர்ப்பாட்டம் நடத்திய ஏபிவிபி அமைப்பினரை சிறையில் சந்தித்ததற்காக மருத்துவர்  சுப்பையா சண்முகம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.