கடந்த 4 மாதங்களாக தாமிரபரணி கூட்டுக்குடிநீர் வரவில்லை என்று கூறி விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன்கோவில் போக்குவரத்து நகர் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் குடிநீர் கேட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் , வத்திராயிருப்பு யூனியன் அதிகாரிகள் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.