tamilnadu

img

கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை

கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் குழந்தைகள் மாணவர்கள் குடும்பத்துடன் கடற்கரை, வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு சென்று வருகிறார்கள். சென்னை வடபழனி விஜயா போரம் மாலுக்கு வரும் குழந்தைகளை சோட்டா பீம் வரவேற்கிறது. ரசிகர்களை மகிழ்விக்க சோட்டா பீம், பையுரி சக்தி, ஜக்கு பாந்தர் மற்றும் காலியா ஆகிய குழந்தை கதா பாத்திரங்கள் வருகை தந்தன. அவற்றுடன் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர். பலர் செல்பி எடுத்துக்கொண்டனர். தோலாக்பூர் கற்பனை நகர கதையில் வரும் சோட்டா பீம் மற்றும் அவனது நண்பர்களை கண்டு குழந்தைகள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர்..