tamilnadu

img

பிற மாநில ஊழியர்களுக்கு பிராந்திய மொழி கற்பிக்க முடிவு தெற்கு ரயில்வே சுற்றறிக்கை

சென்னை, மே 11- ரயில்வேயில் பணியாற்றும் பல ஊழியர்களுக்கு உள்ளூர் மொழி பேசத் தெரியவில்லை. இதனால், டிக்கெட் முன்பதிவு மையங்களில் வாக்கு வாதங் கள் ஏற்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்தி டம் புகாரளித்து வருகின்றனர். இந்த நிலையில் உள்ளூர் மொழி தெரியாத ஊழியர்களுக்கும் பயணிக ளுக்கும் இடையிலான இடைவெளி யைக் குறைக்க ஒவ்வொரு மாநிலத்தின் பிராந்திய மொழியையும்  ஊழியர்களு க்கு கற்பிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேர ளாவில் பணிபுரியும் பல ஊழியர்கள் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு தமிழும் தெரியாது. மலை யாளமும் தெரியாது. இதையடுத்து வடமாநிலங்களிலிருந்து பணிக்கு வந்துள்ள ஊழியர்கள் தமிழ், மலை யாளம், தெலுங்கு அல்லது கன்னடம் ஆகிய மொழிகளின் அறிவைப் பெறு வது அவசியம் என்று ரயில்வே நிர்வா கம் சுற்றறிக்கை ஒன்றில் தெரி வித்துள்ளது.

அந்த சுற்றறிக்கை, சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை, சேலம், திரு வனந்தபுரம் மற்றும் பாலக்காடு கோட்ட அனைத்துத் துறைகளின் தலைவர்கள், பணிமனைகள், ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி மையங்கள்,  ரயில்வே மேலா ளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. “பிராந்திய மொழிகளின் (பிரிவுக ளைப் பொறுத்து) அடிப்படையை  கற்றுக் கொள்வதற்கான பயிற்சிப் பள்ளியை உருவாக்க வேண்டும்.  இதற்கான உள்ளடக்கத்தை ‘கர்மயோகி’ மின் கற்றல் தளத்தில் உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

மற்ற மாநிலங்களைச் சேர்ந்த ஊழி யர்கள் எளிதாகக் கற்கும் வகையில்,  மொபைல் செயலி (இந்திய அரசின் கல்வி அமைச்சகம், ‘MyGov’ இந்தியா வுடன் ‘பாஷா சங்கம்’ (Basha Sangam) ஆகியவை,   இணைந்து உருவாக்கப் பட்டது) இதன் பயன்பாடு பிரபலப் படுத்தப்படலாம் என ரயில்வே தெரி வித்துள்ளது.  பாஷா சங்கம் செயலி  இந்திய அரசிய லமைப்பின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்திய மொழி களை மாணவர்களுக்கு கற்றுத்தர உருவாக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் முன்பதிவு செய்யும்  ஊழி யர்கள், பயண டிக்கெட் பரிசோதகர்கள், இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷனில் பணியாற்றும் கேட்டரிங் ஊழியர்கள், லோகோ பைலட்டுகள் என பலரும் இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். பிராந்திய மொழியின் அடிப்படை கூட அறிந்திராதவர்கள்.  இது குறித்து மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், சில ஊழியர்களுக்கும் பயணிக்கும் பொது மக்களுக்கும் இடையே மொழிப் பிரச்ச னைகள் தவிர, பணியிடத்திலும் தகவல் தொடர்பு பிரச்சனைகள் உள்ளன.

பகலில் 15 கிமீ  இரவில் 10 கிமீ என நிர்ண யிக்கப்பட்ட பாதுகாப்பு வேக வரம்பிற்கு பதிலாக 50 கிமீ வேகத்தில் இயக்குமாறு  உத்தரவிட்டதாக ரயிலின் மூத்த ஓட்டுநர் புகாரளித்தார் என்றார்.   இது போன்ற நிகழ்வுகளால் பணிபுரி யும் இடங்களில் பேசும் மொழிகளை பிற மாநிலத்தவர்களுக்கு கற்பிக்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஓட்டுநருக்கும் கண்காணிப்பாள ருக்குமான உரையாடல் அப்போது இந்தி யில் நடைபெற்றது என்பது குறிப்பி டத்தக்கது.