tamilnadu

இந்தியாவில் 11 பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டுபிடிப்பு

சென்னை,டிச.17- நீரிழிவு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்  ‘டயாபெட்டிஸ் ஆன் வீல்ஸ்’ என்ற  பிரச்சார த்தை  சென்னையில் மாநக ராட்சி ஆணையர் ஜெ.ராதா கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் 100 நாட்க ளுக்கு இந்த வாகனம் பய ணித்து விழிப்புணர்வை உரு வாக்கும்; மேலும் நீரிழிவுக் கான அடிப்படை பரிசோத னைகளும் இலவசமாக இந்த வாகனத்தில் மேற்கொ ள்ளப்படும். ‘டிஷ்யூம் டிஷ்யூம் டயாபெட்டிஸ்’ என்ற பெயரில் காவேரி மருத்துவமனை இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த வாகனத்தில் மருத்துவ, செவிலியர் மற்றும் உணவுமுறை நிபு ணர்கள் அடங்கிய குழு செயல்படும். நீரிழிவு மீதான விழிப்புணர்வை அதிகரிப் பதற்காக கண்காட்சிக்கும் காவேரி மருத்துவமனை ஏற்  பாடு செய்திருந்தது. இதனை  ஆணையர் டாக்டர். ஜெ.  ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய  நீரிழிவு பிரிவு மூத்த ஆலோ சகர் டாக்டர். கே. பரணி தரன்  “நீரிழிவு என்பது சத்த மின்றி உடலில் புகுந்து தாக்கும் ஒரு உயிர்கொல்லி நோய் என்றார். அளவுக்கு மீறிய உடற்பருமன், உடல் உழைப்பற்ற சோம்பேறித் தனமான வாழ்க்கைமுறை, பரம்பரை மரபியல் அம்சங்க ளால் இந்த நோய் வருகிறது.

இந்தியாவில்  11 பேரில் 1 நபருக்கு நீரிழிவு இருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, உலகளவில்  நீரிழிவால் அதிகம் பாதிக்கப் பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. உலகளவில் நீரிழிவால் பாதி க்கப்பட்ட ஆறு நபர்க ளுள் ஒருவர் (17%) இந்தியா வைச் சேர்ந்தவர் என்பது கவலையளிக்கும் புள்ளி விவரம் என்றும் அவர் கூறி னார்.