tamilnadu

img

பி.காம்., பாடப் பிரிவுக்கு போட்டி போடும் மாணவர்கள்!

சென்னை, மே 8 - பிளஸ் 2 தேர்வு முடிவு வெளி யானதை தொடர்ந்து மாண வர்கள் உயர் கல்வியில் சேரு வதற்கான நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கம்போல இந்தாண்டும் பொறியியல், கலை -அறிவியல் படிப்புகளுக்கு உற்சாகத்துடன் விண்ணப்பிக்கத் துவங்கியுள்ள னர்.

இந்த ஆண்டு வணிகவியல்,  பொருளியல், கணக்குப்பதி வியல் பாடங்களில் நூற்றுக்கு  நூறு மதிப்பெண் எடுத்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள தால், கட்-ஆப் மார்க் 99-100  வரை செல்ல வாய்ப்பு இருப்ப தாக கருதப்படுகிறது.

தனியார் கல்லூரிகளில் லட்  சக்கணக்கில் பணம் செலவு  செய்து படிப்பதற்கு வசதியில் லாத குடும்பத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் அரசு கல்லூரிகளை நாடுகின்றனர். சென்னை உள்ளிட்ட முக்கிய நக ரங்களில் உள்ள கலை அறி வியல் கல்லூரிகளில் இடம் கிடைத்தால் போதும். படிப்பு செலவு (சுமை) இல்லாமல் போய்  விடும் என பெற்றோர்கள் கருது கின்றனர்.

அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்திற்கும் மேலான இடங்கள் உள்ளன. அந்த வகையில், பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.பி.ஏ., பி.எஸ்.சி.,  பி.சி.ஏ. உள்ளிட்ட பல்வேறு பாடப்  பிரிவுகளில் சேருவதற்கு போட்டி  போட்டு விண்ணப்பித்து வரு கின்றனர். கலை - அறிவியல்  கல்லூரிகளில் சேர இதுவரை யில் 50 ஆயிரத்துக்கும் மேற்  பட்டவர்கள் விண்ணப்பித்துள்ள னர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு  இடங்களுக்கு கடும் கிராக்கி  ஏற்பட்டுள்ளது. பி.காம் (பொது),  பி.காம் (நிதி), கார்ப்பரேட் மற்றும்  பி.ஏ. ஆங்கிலம், வரலாறு, கம்ப்  யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு களை தெரிவு செய்து இடங்களை புக் செய்து வருகின்றனர்.