திருவள்ளூர்,டிச.3- தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பேரவை சனிக்கிழமையன்று (டிச 2) திருத்தணியில் நடைபெற்றது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா.கலா தலைமை தாங்கினார். வரவேற்பு குழு தலைவர் கோ.இளங்கோவன் வர வேற்றார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் உ.சுமதி, திரு வள்ளூர் மாவட்டத் தலைவர் க.திவ்யா, மாவட்ட செயலாளர் க.வெண்ணிலா, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணை த்தலைவர் சி.காந்திமதிநாதன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலு வலர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஏ.மணிகண்டன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் மாநில பொதுச் செயலாளர் பிரசன்னா,மாநிலத்துணைத்தலைவர் பே.பேயத்தேவன்,மாவட்டத்தலைவர் என்.தேவஅதிசயம்,பொருளாளர் வி.ஜெயா ஆகியோர் வாழ்த்தி பேசி னர்.
சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அ.மலர் விழி வேலை அறிக்கையையும் பொரு ளாளர் எம்.ஆர்.திலகவதி வரவு, செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு பேர வையை நிறைவு செய்து பேசினார்.வர வேற்பு குழு செயலாளர் பா.மணி கண்டன் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
சத்துணவு ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், ஓய்வுபெறும் போது பணி க்கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும், சமையலர் மற்றும் அமைப் பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், பள்ளிக்குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தின் மூலம் காலை உணவு வழங்க வேண்டும்,
10 ஆண்டுகள் பணி முடித்த அமைப் பாளருக்கு இளநிலை உதவியாள ருக்கு குறையாது பதவி உயர்வு வழங்க வேண்டும், காலி பணியிடங் களை நிரப்ப வேண்டும், 50 விழுக்காடு ஆண் ஊழியர்களை தேர்வு செய்ய வேண்டும், 12 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும், வாரிசு களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும், தற்காலிக பணி நீக்கத்தில் உள்ள ஊழியர்களுக்கு பிழைப்பூதியம் வழங்க வேண்டும், ஒரு மாத ஊதியத்தை போனசாக வழங்க வேண்டும், காய்கறி, மளிகை, விறகு ஆகியவற்றின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால் உணவு செலவு மானியத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் மாநில பொதுச் செயலாளர் மு.அன்பரசு மாநாட்டை நிறைவு செய்து பேசுகையில், அரசு அலுவலகங்களில் பணியமர்த்து பவர்களை யாரையும் பணி நிரந்தரம் செய்வதில்லை. தனியார் மயத்தை நோக்கி மாநில அரசு செல்வதை அனு மதிக்க முடியாது. பழைய ஓய்வூதியம், சத்துணவு ஊழியர்களுக்கான கால முறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேறும் ஆண்டாக 2024 அமைய, போராட்ட களம் காண்போம் என்றார்.
க.சுவாமிநாதன்
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் க.சுவாமிநாதன் பேரவையை துவக்கி வைத்து பேசுகையில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர்க ளின் உழைப்பு என்பது சமுகத்தில் கல்வி யின் வளர்ச்சிக்கு, குழந்தைகளின் எதிர் காலத்திற்காக அடித்தளத்தை வலுவாக அமைக்கிறது. 1980களில் 4 லட்சத்து 94 ஆயிரம் துவக்க பள்ளி கள் இருந்தது. தற்போது 7 லட்சத்து 60 ஆயிரம் துவக்க பள்ளிகளாக மாறி யுள்ளது. இதனால் 50 விழுக்காடு குழந்தைகள் பள்ளிக்கு வருவது அதிகரித்துள்ளது. மேல்நிலைப் பள்ளியின் வளர்ச்சி 500 விழுக்காடு உயர்ந்துள்ளது. சத்துணவு திட்டம் வந்த பிறகுதான் இடைநிற்றல் என்பது வெகுவாக குறைந்துள்ளது. பசியை போக்குவது மட்டுமல்ல கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை முதலமைச்சர் விரைந்து நிறைவேற்ற வேண்டும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
முன்னாள் நிர்வாகிகளுக்கு பாராட்டு
மாநில பிரதிநிதித்துவ பேரவையில் முன்னாள் மாநில தலைவர் ப.சுந்த ரம்மாள், மாநில முன்னாள் துணைத் தலைவர் பி.பாண்டி, மாநில முன்னாள் செயலாளர் கு.சக்தி ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக திருத்தணி நகராட்சி அலுவலகம் அருகில் இருந்து கோரிக்கை பேரணி நடைபெற்றது.