சென்னை, பிப்.11- பொதுத்தேர்வை எழுதும் மாணவர்களை கண்காணிக்க உள்ள பறக்கும் படையினர் மாணவர்களை அச்சுறுத்தக் கூடாது என்று கல்வித்துறை அதி காரிகளுக்கு தமிழ்நாடு அரசு அறி வுறுத்தியுள்ளது.\
தமிழ்நாட்டில் மாநிலப் பாடத் திட்டத்தில் படிக்கும் மாண வர்களுக்கான பொதுத்தேர்வு, 12 ஆம் வகுப்பிற்கு மார்ச் 1ஆம் தேதி முதல் 22 வரையிலும், 11 ஆம் வகுப் பிற்கு மார்ச் 4 முதல் 25 வரை யிலும், 10ஆம் வகுப்பிற்கு மார்ச் 26 முதல் ஏப்ரல் 8 வரையிலும் நடை பெறுகிறது.
12ஆம் வகுப்பிற்கு திங்கட் கிழமை (பிப்.12) முதல் 17ஆம் தேதி வரையிலும், 11ஆம் வகுப் பிற்கு பிப்ரவரி 19 முதல் 24 வரை யிலும்,10ஆம் வகுப்பு மாணவர்க ளுக்கான அறிவியல் செய்முறைத் தேர்வு பிப்ரவரி 23ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையிலும் நடை பெற உள்ளது.
இந்த நிலையில், தேர்வு களைக் கண்காணிக்க நியமிக்கப் படும் ஆசிரியர்களுக்கான பணி களையும் வரையறை செய்து அரசுத் தேர்வுத்துறை வழங்கி உள்ளது. இதன்படி, தேர்வுகள் நடைபெறும்போது வெளியில் இருந்து அதிரடியாக கண்காணிக் கும் பணியில் பறக்கும் படையில் நியமனம் செய்யப்படும் ஆசிரி யர்கள் செய்ய வேண்டியவை குறித்தும் தெரிவிக்கப்பட்டுள் ளது.
அதில், “மாணவிகளை சோத னையிட ஆசிரியைகள் நியமனம் பறக்கும் படையில் நல்ல அனுபவ மும், மிக்க நேர்மையும் வாய்ந்த துடிப்பான (குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் அனுபவம் உள்ள) ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பெண் தேர்வர்களைச் சோதனையிட பெண் ஆசிரியர் களையும் பறக்கும்படை உறுப்பி னர்களாக நியமித்தல் வேண்டும். பறக்கும் படையில் உறுப்பினர் களாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள், மிக நேர்மையுடன் உண்மையான முறையில் செயல் படுபவர்களாக இருத்தல் வேண்டும்.
எவரிடத்திலும் அச்சமின்றி யும், அதே நேரத்தில் தமக்கு அளிக்கப்பட்ட பொறுப்பினை எல்லை மீறாமல் செயல்படு பவர்களாகவும் இருத்தல் மிகவும் அவசியம். அடிக்கடி புகார்க ளுக்கு இடமளிக்கக்கூடிய தேர்வு மையங்களை பறக்கும்படை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். அனைத்து தேர்வு மையங்களுக்கும் 10 அறை களுக்கு ஒருவர் என்ற விகிதத் தில் நிலையான படை அமைத்து, தீவிரமாகக் கண்காணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
தேர்வு மையத்தில் ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்டு, பறக்கும் படையினரால் கண்டுபிடிக்கப் பட்ட நிகழ்வுகள் குறித்து, செய்தித் தாள்கள் மூலம் வெளியிடப் பட்டால், ஒழுங்கீனச் செயல்கள் நடைபெறுதல் பெருமளவு குறைக் கப்பட வாய்ப்பு உள்ளதால், அது குறித்து ஆய்வு அலுவலர்களிடம் தெரிவித்து தேவையான நட வடிக்கை எடுக்க வேண்டும்.