tamilnadu

img

விண்ணில் பாய்ந்த 3 செயற்கைக் கோள்கள்

விண்ணில் பாய்ந்த 3 செயற்கைக் கோள்கள்  சென்னை, ஆக.24- தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்டார்ப் நிறுவனம், ‘ஸ்பேஸ்  ஜோன் இந்தியா’ நிறுவனம்  இணைந்து, மறுபயன்பாட்  டுக்கு ஏற்ற வகையில் ‘மிஷன்  ரூமி 2024’ திட்டத்தின் கீழ், ரூமி- 1 என்ற ராக்கெட்டை உருவாக்கியுள்ளன.

இந்தியாவில் தயாரிக்  கப்பட்ட முதல் மறுபயன் பாட்டு ராக்கெட் மூலம் ஆர்எச் எம்ஐ -1, 3 சோதனை செயற்கைக்கோள்கள், சென்னையை அடுத்த கேளம்  பாக்கம் அருகே வங்கக்  கடலை ஒட்டிய திருவிடந்தை  பகுதியில் இருந்து விண் ணில் ஏவப்பட்டது. 3.50 மீட்டர் உயரம் கொண்ட  இந்த ராக்கெட் வானில், 80  கி.மீ. உயரத்தில் பறக்கக்  கூடிய திறன் கொண்டது.

 வழக்கமாக செயற்கைக் கோளை பயன்படுத்திய பின் ராக்கெட்டின் ஆயுட்காலம் முடிந்து விடும். ஆனால் ரூமி மீண்டும் பயன்படும். செயற்கைக்கோளை ஏவிய  பிறகு மீண்டும் பூமி திரும்  பும் வகையில் ரூமி ராக் கெட்டுடன் பாராசூட் இணைக்கப்பட்டு உள்ளது.

மீண்டும் பயன்படுத்தக் கூடிய ராக்கெட்டால், ஒரே  ராக்கெட்டைப் பயன்படுத்தி,  பல முறை செயற்கைக் கோள்களை ஏவலாம். இத னால் செலவு மிச்சமாகும் என்  பது இந்த திட்டத்தின் நோக்க மாகும்.