tamilnadu

சென்னையில் வெள்ள தடுப்பு திட்டம் அடுத்தமாதம் தொடங்குகிறது

சென்னையில் வெள்ள தடுப்பு திட்டம்  அடுத்தமாதம்  தொடங்குகிறது

ன்னை, ஜூன் 13- சென்னையில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதை தவிர்க்கும் வகை யில் வெள்ளத் தடுப்பு திட்ட பணிகள் வரும் ஜூலை மாதம் தொடங்கும் என அறி விக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஆண்டுதோறும் மழை பெய்யும் போது பெரும்பாலான இடங்க ளில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. குறிப்பாக வேளச்சேரியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை அனுபவிக்கின்றனர். மேலும் வாகனங்களை வெள்ளம் மூழ்கடிப்பதால் பெரும்பாலான வாகனங்கள் பழு தடைகின்றன. இதனால் கடந்த ஆண்டு மழையின் போது வேளச்சேரி அதை சுற்றியுள்ள பொது மக்கள் அங்குள்ள மேம்பாலத்தில் தங்கள் 4 சக்கர, இருசக்கர வாகனங்களையும் நிறுத்தியதை பார்க்க முடிந்தது.

வடகிழக்கு பருவமழை

இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டது. வடகிழக்கு பருவமழை அடுத்ததாக வரும்போது சென்னை  பாதிக்கப்படும் என்பதால் வெள்ள தடுப்பு பணிகளை நீர்வளத் துறை அடுத்த மாதம் மத்தியில் தொடங்க முடிவு செய்திருக்கிறது. அந்த வகையில் வெள்ளத் தடுப்பு திட்ட பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க நீர்வளத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வெள்ள தடுப்பு திட்ட பணியின் ஒருபகுதியாக பக்கிங்காம் கால்வாயை 31 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணியும் நடைபெற உள்ளது. மேலும் பக்கிங்காம் கால்வாயில் இருந்து கடலுக்கு கால்வாய் அமைக்கும் பணியை தொடங்க உள்ளது. பக்கிங்காம் கால்வாயில் தெற்கு பகுதி யில் ஒக்கியம் மடுவு அருகே வெள்ள நீர் வெளியே வருவதை தவிர்க்கும் வகை யில் 10 ஆண்டுகளுக்கு முன்பே பணி திட்ட மிடப்பட்டதாகவும், இதற்காக நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் நிலவிய தாகவும் கூறப்படுகிறது. மேலும் பக்கிங்காம் கால்வாய் சீரமைக்கும் போது எடுக்கப்படும் வண்டல் மண், அதன் கரையோரம் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைப்பதற்கு பயன்படுத்தப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்து டன் மத்திய சென்னையில் தண்ணீர் தேங்கு வதை தடுக்கும் விதத்தில் பல்வேறு வளைவு களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அம்பத்தூர் தொழிற்பேட்டை மற்றும் கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையில் அதற்கான பணி யும் முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றும், இதற்கான பணி வரும் அக்டோபர் மாதத்திற்குள் முடிவடையும் என்றும் நீர்வளத் துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.