சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆவடி பகுதிக்குழு சார்பில் அண்ணா சிலை அருகே கொடியேற்று நிகழ்ச்சியும், முஸ்லீம் பெண்களுடன் இணைந்து குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இதில் ஆவடி பகுதி துணைத் தலைவர் பேச்சியம்மாள், புனிதா உதயகுமார் (சிபிஎம்), பெனாசிர், வாசுகி, சட்ட ஆலோசகர் அனுநிதா, சுகன்யா, புனிதா ராஜேந்திரன், தமிழரசி, விமலா, ஞானகுட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.