தம்பரம், டிச.31- சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை புதுகுப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் ஜெயசீலன்(42), அமுது(48), சக்திவேல்(50) ஆகிய 3 பேரும் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை பரங்கிப்பேட்டை கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்துள்ளது. இதில் அமுது சக்தி வேல் ஆகிய இருவரும் கடலில் நீந்தி காயங்க ளுடன் கரைக்கு வந்துள்ளனர். இதில் ஜெயசீலன் உடல் கிடைக்கவில்லை. கரைக்கு வந்தவர்களை மீட்டு சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் படகு கவிழ்ந்து காணாமல் போன ஜெயசீலன் உடலை தீயணைப்புத் துறையினர் மற்றும் மீன வர்கள் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் உதவியுடன் தேடும் பணியில் கடந்த 2 நாட்களாக ஈடுபட்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை சின்ன வாய்க்கால் கடற்கரை ஓரமாக இவரது உடல் கரை ஒதுங்கி உள்ளது. இதனை மீட்டு பரங்கிப்பேட்டை காவல் துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த மீனவர் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் கோ.மாதவன், கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, சிபிஎம் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்க பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் சந்தானராஜ், நிர்வாகிகள் பழனி, சுந்தர், இந்திய மாணவர் சங்க மாவட்ட செய லாளர் ஆகாஷ் உள்ளிட்டவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
இதுகுறித்து எஸ்.ஜி.ரமேஷ்பாபு உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கும், காயத்துடன் உயிர் தப்பியவர்களுக்கும் படகு சேதமடைந்ததுக்கு நிராணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.