சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி, மேட்டுப்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த ஆர்கேவிஎம் பட்டாசு ஆலையில் இன்று காலை எதிர்பாராத விதமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் 2 அறைகள் தரைமட்டமாகி உள்ளது. மேலும் 7 அறைகள் தேசம் அடைந்துள்ளது என முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.