tamilnadu

img

ஒன்றிய அரசுக்கு இறுதி எச்சரிக்கை

“சண்டிகர் தேர்தல் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு நீதி மற்றும் சட்டத்தின் மீதான கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. நாடறிந்து நடந்த தேர்தல் முறைகேட்டை  விசாரித்து தேர்தலை ரத்து செய்தது  மட்டுமின்றி தேர்தல் அதிகாரியின் முறைகேட்டையும் தீர்க்கமாக ஒதுக்கி தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். பாஜகவின் தொடரும் சூழ்ச்சி மற்றும் தந்திரமான நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் இந்த இறுதி எச்சரிக்கை வரும் மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும்” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.