சென்னை, ஜூன் 22 - மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயத்தை தடுக்க கோரி போராட்டம் நடத்திய வாலிபர்களை காவல் துறையினர் வலுக்கட்டாய மாக கைது செய்தனர். கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந் துள்ளனர்.
இந்த நிலையில் கள்ளச் சாராய விற்பனையை மாநிலம் முழுவதும் தடுக்க வேண்டும், மாவட்ட ஆட்சி யர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
இதனையடுத்து, மத்திய சென்னை மாவட்டம் வில்லிவாக்கம் பகுதிக்குழு சார்பில் சனிக்கிழமையன்று (ஜூன் 22) அயனாவரம் ஜாயின்ட் ஆபிஸ் அருகே வாலிபர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டம் நடத்த வந்தனர். போராட்டத்திற்கு அனு மதி மறுத்து 98வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆ.பிரியதர்ஷினி, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே. மணிகண்டன், பகுதிச் செய லாளர் யூஜின், நிர்வாகிகள் நிக்கில் தேவ், டேவிட் உள்ளிட்டோரை வலுக் கட்டாயமாக கைது செய்த னர். இதனால் அந்த பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு போர்க்களம் போல் காட்சி அளித்தது.