பணத்தை திருப்பி அளிக்கக்கோரி சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
கூட்டுறவு சங்கத்தில் கையாடல்
கள்ளக்குறிச்சி, மே 19 - உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர் கேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 1 கோடி ரூபாய் கையாடல் செய்த காசாளர் பணி நீக்கம் செய்யப்பட்ட தகவல் அறிந்த சங்க உறுப்பின ர்கள் மற்றும் விவசாயிகள் தங்களது பணத்தை வழங்க கோரி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை அருகே உள்ளது எலவனாசூர்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம். இதில் எலவனாசூர் கோட்டை, வீரமங்கலம், வாணகப்பாடி, ரஹி மான்தக்கா, நொணைய வாடி, அரும்பலவாடி உட்பட பல்வேறு கிரா மங்களைச் சேர்ந்த விவ சாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும் இந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். பயிர் கடன், கால்நடை கடன் மற்றும் நகை கடன்களை பெற்று பயன டைந்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் காசாளராக பணியாற்றி வந்த பெரிய பகண்டை கிராமத்தைச் சேர்ந்த அமாவாசை வாடிக்கையாளர்களின் வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து போலியாக கையெழுத்திட்டு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை பணத்தை எடுத்து கை யாடல் செய்துள்ளார். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார் சென்றுள்ளது. அதன் பேரில், திருக்கோவிலூர் மாவட்ட இணைப்பதிவாளர் நடத்திய விசாரணையில் வாடிக்கையாளர்களின் குற்றச்சாட்டு உண்மை என தெரியவந்தது. இதை யடுத்து, காசாளர் அமா வாசை கடந்த மாதம் 24 ஆம் தேதி பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், அமாவாசை மீது மேலும் பல புகார்கள் குவிந்து வருகிறது. அந்த குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து விசாரணையில் இருந்து வரும் நிலையில், அவர் பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளதாகவும் அவரிடம் வாடிக்கையாளர்கள் பணம் கடன் தொகையை கொடுக்க வேண்டாம் என்று கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன்பு அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டது. இந்த தகவலை அறிந்த கடன் சங்க உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தது தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் கையாடல் செய்யப்பட்டி ருக்குமோ என்ற அச்சத்தில் கூட்டுறவு கடன் சங்க அலுவலக முன்பு குவிந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.