tamilnadu

img

விவசாயிகள், தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய மோடி அரசின் ஜனநாயக விரோத,விவசாய தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து தொழிற்சங்கங்கள்-ஐக்கிய விவசாயிகள் முன்னணி-இளைஞர்,மாணவர் ,பெண்கள்-கலைஞர்கள்-இலக்கிய அமைப்புகள் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்றது. தொமுச மாவட்ட பேரவை கவுன்சில் தலைவர் திராவிடமணி தலைமையில் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் எம்.செந்தில், கே.விஜயகுமார்,எ.வீராசாமி, தவிச மாவட்ட நிர்வாகிகள் ஏ.வி.ஸ்டாலின்மணி, டி.ஏழுமலை, ஏ. சுப்பிரமணி, கஜேந்திரன், விதொச மாவட்ட  நிர்வாகிகள் பி.சுப்பிரமணியன்,ஆப.பெரியசாமி,எம்.எல் ஆறுமுகம்,மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம், கோவிந்தராஜ்,கல்யாணசுந்தரம்(ஏஐடியுசி),மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.ஆறுமுகம், மு.சிவகுமார்(வாலிபர் சங்கம்), ஏ.தேவி,இ.அலமேலு(மாதர்சங்கம்)ஆகியோர்  பேசினர்.

விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தவிச செஞ்சி வட்ட துணைத்தலைவர் வி.நரசிம்மராஜு தலைமை தாங்கினார், கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் டி.ஆர்.குண்டு ரெட்டியார் முன்னிலை வகித்தார். தவிச மாவட்ட துணைத்தலைவர் கே.மாதவன், சிபிஎம் செஞ்சி வட்ட செயலாளர் டபுல்யு.ஆல்பர்ட் வேளாங்கண்ணி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர்.

திருப்பத்தூர் நகராட்சி பாரத ஸ்டேட் வங்கி எதிரில்  ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஒன்றியஅரசை கண்டித்தும் தில்லியில் விவசாயிகள் போராட்டம் தொடங்கி 4-ம் ஆண்டு ஆனதையொட்டியும், அகில இந்திய விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் காமராஜ் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முல்லை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு அமைப்பாளர் கேசவன், ஏஐடியுசி மாவட்ட அமைப்பாளர் வேணுகோபால் முன்னிலை வகித்தனர். இதில் சிஐடியு, விச, விதொச, ஐக்கிய விவசாயிகள் முன்னணி நிர்வாகிகள் ராஜா, ஆனந்தன், ரவி, ஆனந்தன், காசி, செஞ்சிமணி, வீரமணி, வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சூரிய ஒளி மின்சார ஊழலில் சிக்கி உள்ள கௌதம் அதானியை கைது செய் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சிபிஎம் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக உளுந்தூர்பேட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு துவங்கிய ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் பி.ஸ்டாலின் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் மாவட்ட செயற்குழு,ஜி .ஆனந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.செந்தில்,இ.அலமேலு,மாவட்ட குழு உறுப்பினர்கள் எம்.ஆறுமுகம், டி.எஸ்.மோகன்,ஏ.தேவி,பி.சேகர், ஒன்றிய செயலாளர்கள் ஜெ.ஜெயக்குமார்,வி.ரகுராமன்,வேலா பாலகிருஷ்ணன் கே.ஆனந்தராஜ் ஆகியோர் பங்கேற்றுபேசினர்.

விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்து தொழிற் சங்கங்கள், ஐக்கிய முன்னணி விவசாயிகள் சங்கம் சார்பில் செவ்வாயன்று (நவ. 26) சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர். வெங்கடேசன் தலைமையில் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் பி. ரகுபதி, விவசாய சங்க மாவட்ட செயலாளர் எல்.சி. மணி, தலைவர் எஸ். கிட்டு, பொருளாளர் சி. ராதாகிருஷ்ணன், லிகாய் மாநில செயலாளர் தா. வெங்கடேசன், வி.தொ.ச மாவட்ட தலைவர் டி. சந்திரன், ஆர். மணிகண்டன், ஆற்காடு வட்டார செயலாளர் ஜி. மதியழகன், விஜயன், சேகர், செந்தில்குமார், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் கே.கே.வி. பாபு, பொருளாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேர்தல் கால வாக்குறுதிகளை தமிழக அரச நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் ப. கிருஷ்ணமூர்த்தி தலைமையில்  மாநில செயலாளர் சி. சுப்பிரமணியன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எஸ். பார்த்திபன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.