tamilnadu

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அக். 9 இல் ஆர்ப்பாட்டம்

சென்னை,அக்.4- சாம்சங் தொழிலாளர்களின் போரா ட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் அக்டோபர் 9 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இதுகுறித்து விவசாயிகள் சங்கத் தின் மாநிலப் பொதுச்செயலாளர்   சாமி. நடராஜன், விவசாயத் தொழி லாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகி யோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் சாம்சங் பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றிவரும் 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதியி லிருந்து தொடர்ந்து 25 நாட்களாக தங்க ளுடைய அடிப்படை உரிமைகளுக் காக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்கள் சங்கங்களின் சார்பில் முழு மையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்.  

அங்கு பணியாற்றிடும் தொழிலாளர் கள் தங்களுடைய கோரிக்கைகள் குறித்து நிர்வாகத்தோடு பேச்சு வார்த்தையை நடத்துவதற்கு அடிப் படையாக தங்களுக்கென்று சங்கம் அமைத்து பதிவு செய்வதற்கு மாநில தொழிலாளர் நலத்துறையிடம் முறை யாக விண்ணப்பித்தும் இதுவரை சங்கம் பதிவு செய்யப்படாத கார ணத்தினால் தான் தொழிலாளர்கள் போராட்டம் நீடித்து வருகிறது.

 தமிழ்நாடு அரசாங்கம் சட்டத்திற்குட்பட்டு தொழிலாளர்கள் சங்கப்பதிவை இதுவரை செய்து தராமலும், தொழிலாளர்களின் கூட்டுப் பேர உரிமையைப் பாதுகாப்பதற்கு மாறாக சாம்சங் பன்னாட்டு நிறுவனத் திற்கு ஆதரவாக போராடி பெற்ற தொழிற்சங்கம் அமைத்திடும் உரிமை யை மாநில அரசே மறுப்பது ஏற்கத் தக்கதல்ல. சாம்சங் தொழிலாளர் களின் போராட்டத்தை முறியடிப்ப தற்கு காவல்துறையை பயன்படுத்தும் மாநில அரசாங்கத்தின் நடவடிக்கை யை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

 சாம்சங் தொழிலாளர்களின் கோரிக் கைகளை உடனே நிறைவேற்றிட வேண்டும். தொழிற்சங்கத்தை சட்டப் படி பதிவு செய்திட வேண்டும் என்று வலியுறுத்தி அக்டோபர் 9 அன்று மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்கள், பொதுமக்கள் பெருமள வில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.