tamilnadu

விளைநிலத்தை பாதுகாக்கப் போராடினால் குண்டர் சட்டமா?

சென்னை, நவ. 17 - விளைநிலங்களை பாதுகாக்கப் போராடி யவர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செய லாளர் சாமி. நடராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் சிப்காட் 3 ஆவது திட்ட விரி வாக்கத்திற்காக 11 ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் விளை நிலங்கள் உட்பட விவ சாயிகளின் நிலங்களை கையகப்படுத்து வதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்வதை கைவிடக் கோரி பாதிக்கப்படக்கூடிய விவசாயிகள் கடந்த ஜூலை 2 முதல், 124 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் அழைத்துப் பேசி, தீர்வு காணாத சூழலில் கடந்த நவம்பர் 2 அன்று செய்யாறு பேருந்து நிலையத்திலிருந்து பாதிக்கப்பட்ட கிராமங்களை சேர்ந்த விவ சாயிகள் பேரணியாக செல்ல முயன்றனர்.  அப்போது காவல்துறையினர் வலுக் கட்டாயமாக தடுத்து நிறுத்தியதோடு போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வரும் 22 விவசாயிகள் மீது 11 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நவம்பர் 4 அன்று கைது செய்துள்ளனர். இவர்களில் 6 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 7 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்து, அந்த 7 பேரையும் வெவ்வேறு சிறைகளில் அடைத்துள்ளனர்.

விவசாயிகளின் வாழ்வாதாரமான விளை நிலங்களை பாதுகாப்பதற்காக போராட்ட த்தில் ஈடுபட்ட விவசாயிகளை, குண்டர் தடுப்புச் சட்டம் மூலம் சிறையில் அடைத்திருப்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.  

விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ரத்துசெய்து சிறையில் உள்ள அனைத்து விவசாயி களையும் உடனே விடுதலை செய்திட வேண்டும். மேலும் போராட்டம் நடத்தி  வரும் விவசாயிகளிடம் உரிய முறையில்  பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு, காண்ப தற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்று  வலியுறுத்து கிறது. இவ்வாறு சாமி.நடராஜன் கூறியுள்ளார்.

ஐக்கிய விவசாயிகள் முன்னணி

இதேபோல, விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு கண்ட னம் தெரிவித்துள்ள ஐக்கிய விவசாயிகள் முன்னணியின்  (SKM) தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் கே. பாலகிருஷ்ணன், கைது செய்யப்பட்ட அனைத்து விவசாயி களையும், எந்தவித நிபந்தனையும் இன்றி தமிழ்நாடு அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.