சென்னை, ஆக. 31- பாஜக-வில் சேர வந்த ரவுடி, காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓடினார். அந்த ரவுடியை பாஜக மாநில செயலாளர் கே.டி.ராகவன் தனது காரில் காப்பாற்றி அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. சென்னையை அடுத் துள்ள நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சூர்யா (32). இவர் மீது 7 கொலை வழக்கு உட்பட 60 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரை கடந்த சில மாதங்களாக காவல் துறையினர் தேடி வரும் நிலையில், தலைமறைவாக உள்ளார். இந்த நிலையில் செங் கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி கிராமத்தில் பாஜக கட்சி சார்பாக மோடி கிட், முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி திங்களன்று (ஆக.31) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் எல்.முரு கன் கலந்து கொண்டார். இந்நிலையில் ரவுடி சூர்யா எல்.முருகன் முன்னிலை யில் பாஜக-வில் இணைய உள்ளதாக காவல்துறையின ருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப் படையில் செங்கல்பட்டு மாவட்ட, ஓட்டேரி காவல் துறையினர் சம்பவ இடத் தில் ரகசிய விசாரணை நடத்தி னர். போலீசார் தேடுவதை அறிந்த ரவுடி சூர்யா, தனது காரை அங்கேயே விட்டு விட்டு, பாஜக மாநிலச் செய லாளர் கே.டி.ராகவன் காரில் ஏறி தப்பிவிட்டார்.
இதனையடுத்து அங்கு பதுங்கி இருந்த ரவுடி சூர்யா வின் கூட்டாளிகள் ஜோசப் பெஞ்சமின் (20), சரத்குமார் (29), ருக்மாங்கதன்(20), யவாகித்தன்(20), பிரபாக ரன்(35), அன்பு ஆகிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி சூரியாவின் காரை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறை வாக உள்ள ரவுடி சூர்யாவை தேடும் பணியிலும் போலீ சார் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபல ரவுடி கல் வெட்டு ரவி பாஜகவில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் முருகன், “யார் வந்தாலும் எங்கள் கட்சியில் சேர்த்துக் கொள் வோம். பின்புலத்தை யெல்லாம் ஆராய்ந்து பார்க்க முடியாது” என்று கூறினார்.