குடும்ப பாதுகாப்பு நிதி
காஞ்சிபுரம் மாவட்டம், கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் படப்பை, கலைஞர் நகர் கிளை நிர்வாகி தோழர் பி.சங்கர் மறைவையொட்டி குடும்ப பாதுகாப்பு நிதியாக 2 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் சங்கரின் துணைவியார் எஸ்.ஜெயலட்சுமியிடம் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.பாபு, சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் பி.ரமேஷ் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பச்சையப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆர்.கார்த்திக், மூத்த தோழர் ஆர்.நந்தகோபால், சிபிஎம் குன்றத்தூர் வட்டச் செயலாளர் கே.அண்ணாதுரை,நிர்வாகிகள் ஆர்.ராஜகோபால், மணிகண்டன் முருகம்மாள் தேவேந்திரன் உள்ளிட்ட உடனிருந்தனர்.