tamilnadu

img

போலி பேராசிரியர்கள்: 900 பேருக்கு வாழ்நாள் தடை

சென்னை, ஆக. 26 -
போலி பேராசிரியர்கள் விவகாரத்தில் தொடர்புடைய 900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள தாக தகவல்கள் வெளி யாகி உள்ளன.

அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் வரும் பொறியியல் கல்லூரி யில் பேராசிரியர்கள் முறைகேடாக பணியில் சேர்ந்ததை, தனியார் அமைப்பு ஒன்று, வெட்ட வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது.

இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் தீவிர விசாரணை நடத்தி, பேராசிரியர்கள் விவரங்களை பார்த்து, அதில் போலியாக, முறை கேடாக சேர்ந்தவர்கள் விவரங்களை சேகரித்தது. 

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், 3 பேர் கொண்ட குழுவும்  அமைக்கப்பட்டது. அந்த குழு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. 

இதற்கிடையில், அண்ணா பல்கலைக் கழக சிண்டிகேட் கூட்டத்தில் இந்த விவ காரம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

போலி பேராசிரியர்கள் விவகாரத்தில் தொடர்புடையதாக கருதப்படும் 295 தனியார் பொறியியல் கல்லூரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வும், சம்பந்தப்பட்ட சுமார் 900 பேராசிரி யர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், இதற்கு சிண்டிகேட் நிர்வாகிகள் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.