tamilnadu

இலங்கைக் கடற்படையால் மீனவர்கள் பாதிப்பு

சென்னை,ஜன.20- இந்திய மீனவர்கள் மீது இலங்கை  கடற்படையினர் தொடர்ந்து தாக்கு தல் நடத்தி வருவது குறித்தும் அதை  ஒன்றிய அரசு தடுத்து நிறுத்த வேண்டி யும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவையில் கடந்த டிசம்பர் 5 அன்று நேரமில்லா ‘பூஜ்ய’ நேரத்தில் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இம் மாதம் 12 ஆம் தேதி வைகோவுக்கு பதில் அளித்து கடிதம் எழுதியுள்ளார். விவரம் பின்வருமாறு:- பிரதமர் உள்ளிட்ட உயர்மட்ட குழு, இந்திய மீனவர்கள் பிரச்சனை கள் குறித்து இலங்கை அரசுடன்  விவாதிக்கிறது. பேச்சுவார்த்தைகளில், இந்திய மீனவர்கள் வாழ்வாதார நிலையை கருத்தில் கொண்டு, மனித  நேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும்  என்று இலங்கை அரசை இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், எந்தச் சூழ்நிலையிலும் மோதல் போக்கை கடைபிடிக்க கூடாது  என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை உடனான கூட்டு பணிக்குழு வின் தொடர் பேச்சுவார்த்தைகளில், கைப்பற்றப்படும் மீன்பிடி படகுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது அடுத்த கூட்டுப் பணிக்குழுவின் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. ஜனவரி 9 ஆம் தேதி நிலவரப்படி, 13 இந்திய மீனவர்கள் இலங்கை காவலில் உள்ளனர். இந்திய அரசின் தொடர் முயற்சியால், 227  இந்திய மீனவர்களையும், 14 மீன்பிடி  படகுகளையும் கடந்த 2023 ஆம்  ஆண்டில் மீட்டுள்ளோம். மீதமுள்ள வர்களை விடுவிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

கொழும்பில் உள்ள இந்திய தூதரக ஆணையரும், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளும் சிறைக்காவலில் உள்ள இந்திய மீனவர்களை மீட்பதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுத்து எடுத்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.