மதுரை, ஜூன் 27- மதுரை வழியாக இயக்கப்படும் தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில் சேவை ஜுன் மாதம் வரை இயக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது பயணிகளின் வசதிக்காக இந்த ரயில் சேவை மேலும் 3 வார காலத்திற்கு நீட்டிப்பு செய்யப் பட்டுள்ளது. அதன்படி நாகர்கோவிலில் இருந்து மாலை 04.35 மணிக்கு புறப் படும் தாம்பரம் சிறப்பு ரயில் (06012) ஜூலை 7, 14, 21 ஆகிய ஞாயிற்றுக்கிழ மைகளில் இயக்கப்பட்டு மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து காலை 08.05 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் சிறப்பு ரயில் (06011) ஜூலை 8, 15, 22 ஆகிய திங்கட்கிழமைகளில் இயக்கப்பட்டு இரவு 08.55 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வரு கிறது என்று மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.