கொரோனாவால் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் உயிரிழப்பு
சென்னை, மே 21- நிவாரணப் பணிகளில் ஈடு பட்டிருந்த முன்னாள் உறுப்பினர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயி ரிழந்துள்ளார். எனவே, அந்த வார்டில் பரந்தளவில் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தி உள்ளது. இது தொடர்பாக பல்லா வரம் நகர்மன்ற முன்னாள் உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக் குழு உறுப்பினருமான எஸ்.நரசிம்மன், செங்கல்பட்டு மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி உதயச்சந்தி ரனுக்கும், மாவட்ட ஆட்சி யர் ஜான்லூயிசுக்கும் தகவல் அனுப்பியுள்ளார். அதில், பல்லாவரம் நக ராட்சி 29 வார்டு முன்னாள் உறுப்பினர் எஸ்.சந்திரசேகர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மே.20 அன்று சிகிச்சை பல னின்றி காலமானார். அவரு டைய குடும்பத்தை சார்ந்த மேலும் மூவர் குரானா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கும் முன் பல நாட்களாக சந்திர சேகருக்கு நோய் தொற்று அறிகுறி இருந்துள்ளது. இருப்பினும், 29 வார்டு மக்களுக்கு கப சுர குடிநீர் கொடுப்பது, உதவி கள் வழங்குவது என நிவா ரணப் பணிகளில் ஈடுபட்டுள் ளார். எனவே, 29வது வார் டில் பரந்தளவில் பரிசோத னைகளை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.