tamilnadu

img

உடற்பயிற்சி செய்வதால் நல்ல பழக்கங்கள் ஏற்பட்டு வாழ்க்கையில் முன்னேறலாம் வி.ஐ.டி துணைத்தலைவர் ஜி.வி. செல்வம் பேச்சு

சென்னை, மே 22விஐடி சென்னை வளாகத்தில் 6ஆம் ஆண்டு இலவச கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம் மே1ஆம் தேதி தொடங்கி 21 ஆம்தேதி வரை நடைபெற்றது.இந்த பயிற்சி முகாமில் 50 பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். 8 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, மற்றும் டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் பயிற்சி பெற்றனர். 8 வயதிற்கு கிழ் உள்ளவர்களுக்கு சிறு விளையாட்டுகள் மற்றும் சிறப்புப்பயிற்சிகள் மூலம் நடத்தல்,ஓடுதல், தாவுதல், தத்தித் தாவுதல், நொண்டிஅடித்தல், உடலைவளைத்தல் போன்ற தேகப்பயிற்சி மூலமாக உடற்கல்வியின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டது.செவ்வாயன்று (மே 21)நடைபெற்ற பயிற்சி முகாம் நிறைவு விழாவில் விஐடிதுணைத் தலைவர் ஜி.வி.செல்வம் கலந்து கொண்டுபேசினார். இந்தப் பயிற்சியில் பங்குபெற்ற மாணவமாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் சிறப்பு ஊக்கப்பரிசுகளை வழங்கினார். வி.ஐ.டி.சென்னை வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மாணவ, மாணவியர்களுக்கு தொடர்ந்து 6 -வது ஆண்டாகஇந்தப்பயிற்சி முகாம் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.அதிகாலையில் எழுவது, உடற்பயிற்சிகள் செய்வது என மாணவ, மாணவியர்களிடம் நல்ல பழக்கங்கள் உருவாக்க இது நல்ல தொருவாய்ப்பாக அமைந்திருப்பதாக அவர் கூறினார். உடலில் ரத்தஓட்டம் சீராகி, ஆரோக்கியம் பெருக இது உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் இந்த விழாவில் மாணவர் நலத்துறை இயக்குனர் ஆர்.பத்மநாபன், உடற்கல்வி உதவிஇயக்குனர்கள் பு.மு.பாலமுரளி, ஏ. திவ்யபிரியா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.