சென்னை, ஜூன் 16- அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 23 ஆம் தேதி நடை பெறும் என அக்கட்சி அறிவித்துள் ளது. இந்நிலையில், இந்த கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ்.சூரியமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு 4-வது உதவி உரிமையி யல் நீதிமன்ற நீதிபதி பிரியா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனி சாமி ஆகியோர் சார்பில், நிராகரிப்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் தரப்பில் பொதுக்குழுக் கூட்டம் வரும் 23 ஆம் தேதி நடை பெற உள்ளதால் வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, நிராகரிப்பு மனு தொடர்பாக சூரியமூர்த்தி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 22 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.