tamilnadu

தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த பிறகும் மோடி அரசு அட்டூழியம்

சென்னை, மார்ச் 23- தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த போதிலும் ஒன்றிய அரசு அமலாக்கத்துறை உள்ளிட்ட  மத்திய முகமைகளை பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்று இந்தியா கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள், தேர்தல் ஆணையத்திடம் கடும் கண்ட னம் தெரிவித்தனர்.

மக்களவைத் தேர்தலை அமைதி யான முறையில் நடத்தி முடிப்பதற் கான ஏற்பாடுகள்  தொடர்பாக அர சியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்பதற் கான அனைத்து கட்சிகள் கூட்டம் சனிக் கிழமையன்று (மார்ச் 23) சென்னை தலைமைச் செயலகத்தில் நடை பெற்றது. 

இதில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் சார்பில் மாநிலக்குழு உறுப்பி னர் ஏ.ஆறுமுகநயினார், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் க.பீம்ராவ் (சிபிஎம்) ந.பெரியசாமி, ரவீந்திரன் (சிபிஐ), சந்திரமோகன், நவாஸ் (காங்கிரஸ்), மாநில கட்சிகள் சார்பாக எஸ்.ஆர். பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் (திமுக), முன்னாள் அமைச்சர் டி. ஜெயகுமார் (அதிமுக) உள்ளிட்ட 10 அர சியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங் கேற்றனர்.

வெறுப்பு பேச்சுகளுக்கு வாய்ப்பூட்டு!
தேர்தல் முன்னேற்பாடுகள், பிரச்சா ரத்தின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி விரிவாக எடுத்து ரைத்தார். அப்போது, “பல்வேறு சாதி, இனம், மதம், மொழியைச் சார்ந்த மக்களிடையே வேறுபாடுகளைத் தீவிர மாக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. குறிப்பாக, ஒருவருக்கு ஒருவர் இடையில் வெறுப்பை உருவாக்கும் வண்ணம் அல்லது பதற்றத்துக்கு வழி செய்யும் எந்த செயலிலும் எந்த  ஒரு கட்சியும், வேட்பாளரும் ஈடுபடக் கூடாது” என்றார்.

மேலும், பிற அரசியல் கட்சிகள் குறித்து விமர்சனம் அவற்றின் கொள்கைகள், செயல் திட்டங்கள், கடந்த காலச் செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பா னது மட்டுமே இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஊர்வலம்-பொதுக்கூட்டங்கள்
ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யும் அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் ஊர்வலம் தொடங்கும் இடம், முடியும் இடம், நேரம், செல்லும் வழித் தடம் ஆகியவற்றை முன்னரே  தீர்மானிக்க வேண்டும். அத்தியா வசிய தேவையை தவிர பிற காரணங் களுக்காக இந்த ஏற்பாட்டில் எந்த  மாற்றத்தையும் செய்யக்கூடாது. இது குறித்து உள்ளூர் காவல் துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும். அப் போதுதான் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்து கொடுப்பார்கள்.

பிற அரசியல் கட்சிகளின் கூட்டங் கள் மற்றும் ஊர்வலங்களுக்கு தடங்கல் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தக்  கூடாது. கூட்டத்தை சீர்குலைக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

பணப்பட்டுவாடா கூடாது!  
தேர்தல் காலங்களில் பணமாகவோ பொருளாகவோ அல்லது வேறு விதமாக கொடு த்து வாக்கு சேகரிக்கக் கூடாது. மதுபானங்களை வழங்கக்கூடாது. அரசியல் கட்சிகள் மாநி லத்தின் அனைத்து பகுதிகளிலும் பயன்படுத்தும் வீடியோ வாகனங்கள், மோட்டார் வாகன சரத்துகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

புகார் அளிக்கலாம்!
தேர்தல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தேர்தல் நடத்துவது குறித்து திட்டவட்டமான புகார் அல்லது பிரச்ச னைகள் ஏதேனும் இருந்தால் வேட்பாளர் அல் லது அவரது முகவர்கள் தேர்தல் பார்வை யாளரின் கவனத்திற்கு கொண்டு வரலாம்.

விளம்பரத்திற்கு அனுமதி தேவை!
பதிவு செய்யப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தலில் நிற்கும் ஒவ்வொரு வேட்பாளரும் தங்களது விளம்பரங்களைத் தொலைக்காட்சி, கம்பிவட ஊடகங்கள், வானொலி, செய்தித்தாள் மற்று சமூக வலைத்தள ஊடகங்களில் ஒளிபரப்ப விரும்பினால் மூன்று நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதி பெற வேண்டும்.

குற்றப் பின்னணியை வெளியிட வேண்டும்
குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்கள் அது தொடர்பான விவரங்களை தொலைக் காட்சி மற்றும் நாளிதழ்களில் மூன்று முறை வெளி யிட வேண்டும். இந்த விவரத்தை குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்கள் நிறுத்தும் அரசியல் கட்சியும் விண்ணப்பத்தை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதியில் இருந்து நான்கு நாட்களுக்குள் அதாவது, மார்ச் 31  முதல் ஏப்ரல் 3 வரை மற்றும் அடுத்த ஐந்து  முதல் எட்டு நாட்கள் வரை (ஏப்ரல் 4 முதல் ஏப்.7) ஒன்பதாவது நாள் முதல் பிரச்சாரத்துக் கான கடைசி நாள் வரை (ஏப்.8 முதல் ஏப்.17) தொலைக் காட்சி மற்றும் நாளிதழ்களில் மூன்று முறை அவசியம் வெளியிட வேண்டும் என்றும் தேர்தல் அதிகாரி கேட்டுக்கொண்டார்.

இந்தியா கூட்டணிக் கட்சிகள்  கடும் கண்டனம்

இக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக, சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகளின்  பிரதிநிதிகள், “தேர்தல் தேதி அறி விக்கப்பட்டதும் நடத்தை விதிமுறைகள் அம லுக்கு வந்துவிட்டன. ஆனால் அமலாக்கத்து றை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளை சோதனை என்ற பெயரில் ஒன்றிய பாஜக அரசு, தவறாக பயன்படுத்தி வரு கிறது. எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டி வருகிறது. தேர்தல் பணிகள் துவங்கி விட்ட நிலையிலும், தில்லி முதல்வரை அமலாக்கத் துறை கைது செய்திருப்பது எந்தவிதத்திலும் ஏற்கமுடியாது” என்று கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி செல்லும் இடங்களில் அரசு இயந்திரங்கள் அனைத்து வகையிலும் தவறாக பயன்படு த்தப்படுகிறது. அதை தேர்தல் ஆணையமும் அதிகாரிகளும் அனுமதிப்பது எந்த விதத்தில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பினர்.

“வியாபாரத்திற்கு வணிகர்கள் கொண்டு செல்லும் பணத்தைப் பறிமுதல் செய்து நெருக்கடி கொடுக்கிறார்கள். இந்த பிரச்ச னைக்கு சுமூக தீர்வு காண்பதற்காக வர்த்தக அமைப்புகளின் தலைவர்கள் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கை களை முன்வைத்து கேள்விகளை எழுப்பினர். அனைத்தையும் கேட்டுக்கொண்ட தலைமை தேர்தல் அதிகாரி, உரிய முறையில் தலையீடு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித் தார்.