சென்னை, டிச. 2 - வியட்நாம் சோசலிச குடியரசின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஹ மின் ஹியு தலைமையில் 25 கலை ஞர்களை கொண்ட குழு ‘வியட்நாம் மக்கள் நட்புறவு கலைக்குழு’ இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. சனிக்கிழமையன்று (டிச.2) இந்த குழுவினர் சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலு வலகத்திற்கு வருகை தந்தனர். இந்த குழுவினரை வரவேற்று காம்ரேட் டாக்கீஸ் குழுவினரின் இசை நிகழ்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்திற்கு அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி னார். மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் மத்தியக்குழு உறுப்பி னர்கள் அருண்குமார், உ.வாசுகி, பி.சம்பத், பெ.சண்முகம், உலக சமாதானக் கவுன்சில் தலைவர் பல்லப் சென் குப்தா உள்ளிட்டோர் பேசினர். வியட்நாம் குழுவினரை வரவேற்று கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது: இந்தியாவுக்கு வருகை தந்துள்ள வியாட்நாம் நட்புறவு கலைக் குழுவினரை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் அன்புடன் வரவேற்கிறேன். இந்த குழுவில் இடம்பெற்றுள்ள பெரும் பாலான பிரதிநிதிகள் இளைஞர்க ளாக இருப்பது மிகவும் மகிழ்ச்சிய ளிக்கிறது.
ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வீரஞ்செறிய போராட்டம்
இந்தியாவும் வியட்நாமும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீரஞ்செறியபோராட்டத்தை நடத்திய பாரம்பரியம் மிக்க நாடுகள் ஆகும். நாட்டின் விடுதலைக்காக நாங்கள் பல ஆண்டுகள் போராடிய பின்னர் 1947 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. ஜப்பான் மற்றும் பல ஏகாதிபத்திய நாடுகளால் வியட்நாம் பல ஆண்டுகள் ஆக்கிர மிப்பில் இருந்தது. வியட்நாமில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடைபெற்ற விடுதலை போராட்டத்தில் அனைத்து மக்களும் பங்கேற்றனர். அது மற்ற நாடுகளில் ஏகாதியபத்தியத்தை எதிர்த்த போராட்டத்திற்கு வலுசேர்த்ததோடு ஊக்கமளித்தது. ஏகாதிபத்திய சக்திகளால் வியட்நாம் வடக்கு தெற்கு என்று பல ஆண்டுகள் பிரிந்து கிடந்தது. வரலாற்றில் ஏகாதிபத்திய சக்திகளால் பிளவு படுத்தப்பட்ட நாடுகள் ஒன்று சேர்ந்ததாக வரலாறு இல்லை. ஆனால் விடுதலை போராட்டத்திற்கு பிறகு 1975 ஆம் ஆண்டு வியட்நாம் ஒரே நாடாக இணைந்தது. ஏகாதிபத்திய சக்திகளை தோற்கடித்ததோடு மட்டுமல்லாமல் வியட்நாம் பொருளாதார ரீதி யாக வளர்ச்சியடைந்த நாடாகவும் கட்ட மைக்கப்பட்டது. சமீபத்தில் எங்களது கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம்யெச்சூரி தலைமையிலான சிபிஎம் பிரதி நிதிகள் குழுவினர் வியட்நாம் கம்யூ னிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் வியட்நாமில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். வியாட்நாமின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியமான தலைவர்களுடன் உலக நிலைமைகள் மற்றும் உலக கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து விவாதித்தனர்.
பெருந்தொற்றை வெற்றிகரமாக எதிர்கொண்ட நாடு
கொரோனா வைரஸ் தெற்றால் அமெரிக்கா, ஜெர்மன், ஜப்பான் மற்றும் பல வளர்ச்சி யடைந்த நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அந்த நோயை அந்த நாடுகளால் கட்டுப்படுத்த முடியவில்லை. பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு போதிய சிகிச்சை அளிக்க முடிய வில்லை. ஆனால் சீனாவும் வியட்நாமும் இணைந்து கொரேனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடி வெற்றி பெற்றன. சோசலிச நாடான வியட்நாமில் சிறந்த மருத்துவம் காரணமாக இந்த தொற்றால் மிகமிக குறைந்த எண்ணிக்கையிலான மக்களே உயிரிழந்தனர். 10 கோடி மக்கள் தொகை கொண்ட வியட்நாமில் வேளாண்மை, அறிவியல், சுகாதாரம், தொழில். மகளிர் முன்னேற்றம் என அனைத்துதுறைகளிலும் மிகப் பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. உண்மை யிலேயே வியட்நாம் மக்கள் சோசலிச சமூக கட்டமைப்பின் வளர்ச்சியை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வரு கிறார்கள். வியாட்நாம் வரலாறும் சோசலிச சமூகத்தின் வளர்ச்சியும் எங்களுக்கும் பிற நாடுகளின் மக்க ளுக்கும் உத்வேகத்தை அளிக்கிறது என்று கூறி வியட்நாம் குழு வினரை மீண்டும் ஒருமுறை வர வேற்று மகிழ்கிறேன். இவ்வாறு பாலகிருஷ்ணன் பேசினார். இதனைத் தொடர்ந்து வியட்நாம் குழுவினர், தோழர் பி.ராமமூர்த்தி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.