மோசடியில் ஈடுபட்ட ராஜேந்திர பாலாஜி
உயர்நீதிமன்றத்தில் புகார்
சென்னை, ஆக. 23 - ஆவின் நிறுவனத்தில் மேலாளர் பணி வாங்கித் தருவதாகக் கூறி, மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது, குற்றப்பத்தி ரிகை தாக்கல் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு பதிந்து 3 ஆண்டாகியும் காவல்துறை தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சாத்தூரை சேர்ந்த ரவீந்திரன் மனு தாக்கல் செய்துள்ளார்.
6 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை, ஆக. 23 - மேற்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஆகஸ்ட் 24 முதல் 29-ஆம் தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.