tamilnadu

img

அரசு போக்குவரத்துக் கழகத்தை பாதுகாக்க ஊழியர்கள் போராட்டம்

சென்னை, ஜூன் 24 - போக்குவரத்துக் கழகத்தை பாது காக்க கோரி திங்களன்று (ஜூன் 24)  24 மணி நேர உண்ணாநிலைப் போராட்ட த்தை போக்குவரத்து ஊழியர்கள் தொடங்கி உள்ளனர்.   மாநிலம் முழுவதும் 100 மையங்களில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.
கழகங்களின் வரவுக்கும், செல வுக்குமான வித்தியாசத்தொகையை பட்ஜெட்டில் ஒதுக்கித் தரவேண்டும், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த் தையை தொடங்க வேண்டும், 18  மாதங்களாக ஓய்வு பெறும் தொழிலா ளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள ஓய்வுக் கால பணப்பலன்களை வழங்க  வேண்டும்;

தேர்தல் வாக்குறுதிப்படி 1.4.2003க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வேண்டும், மின்சாரப் பேருந்துகளை தனியார் மூலம் இயக்குவதை கைவிட வேண்டும், காலாவதியான பேருந்துக ளுக்கு மாற்றாக புதிய பேருந்துகளை வாங்க வேண்டும், பேருந்துகளுக்கு தேவையான உதிரி பாகங்களை கொள்முதல் செய்ய வேண்டும்;

வாரிசுப் பணியிடங்கள், காலிப் பணி யிடங்களை முழுமையாக நிரப்புவ தோடு, ஒப்பந்த பணியாளர் முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 6 மையங்களில் இந்தப்  போராட்டம் நடைபெற்றது.

அதன் ஒருபகுதியாக மாநகரப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகமான பல்லவன் இல்லம் முன்பும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தொடங்கி வைத்தார்.  அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சட்டமன்றத் தேர்தலின்போது தொழிலாளர்களுக்கு அளித்த வாக்கு றுதிகளை அரசு இன்னும் நிறைவேற்ற வில்லை. போக்குவரத்துத் துறையில் நிரந்தரப் பணியில் ஒப்பந்தமுறையில் ஊழியர்களை நியமிக்க முற்படுவது, கழகத்தை தனியார்மயமாக்கும் வேலைதான். ஓட்டுநர், நடத்துநர் என  தனித்தனியாக அல்லாமல், இவை  இரண்டும் சேர்ந்த உரிமம் வைத்திருந் தால்தான் பணி தருவோம் என்று கூறி வாரிசுப் பணியை மறுக்கின்றனர்.

மருத்துவக் காப்பீடு திட்டம்

ஓய்வூதியர்களுக்கு 107 மாதங் களாக அகவிலைப்படி உயர்வு வழங்கா மல் உள்ளனர். தற்போது ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்கு பணப்பலன் களையே வழங்காமல் அனுப்புகின்ற னர். குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக் கும் அகவிலைப்படி, ஓய்வூதிய உயர் வைத் தர மறுக்கின்றனர். அரசுக்கு செல வில்லாத மருத்துவக்காப்பீடு திட்டத் தை செயல்படுத்தவும் மறுக்கின்றனர்.

10 ஆயிரம் வழித்தடங்களில் நட்டத்தில் பேருந்து இயக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் நட்டத்தை ஈடு கட்ட வரவுக்கும் செலவுக்குமான வித்தி யாசத் தொகையை வழங்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி  நிதியை வழங்கினால், பல பிரச்சனை களுக்கு தீர்வு ஏற்படும்.

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவக்கிடுக!

 ஊதிய ஒப்பந்தக் காலத்தை மூன்றி லிருந்து 4 ஆண்டாக உயர்த்தினார் கள். அதன்படி ஊதிய ஒப்பந்தம் காலா வதியாகி ஓராண்டாகி விட்டது. எனவே, ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும்.

தனியாருக்கு கொடுக்கவே மினி  பஸ் திட்டத்தை கொண்டு வருகின்ற னர். இது மிகப்பெரிய தவறு. மினி  பஸ்களை போக்குவரத்துக் கழகங் களே இயக்க முடியும். காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண்டும்; அதில் வாரிசுகளுக்கு முன்னுரிமை தர வேண்டும். காலிப்பணியிடங்களை ஒப்பந்த முறையில் நிரப்பக் கூடாது. இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.

ஜனவரி மாதம் சிஐடியு இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தியது. உயர்நீதிமன்றம் தலை யிட்டு, தொழிலாளர்களின் கோரிக்கை கள் நியாயமானவை, சட்டவிரோதம் அல்ல; பொங்கல் பண்டிகை நேரம் என்பதால் மக்கள் நலன் கருதி போராட்டத்தை கைவிட வேண்டுகோள் விடுத்தது. அதனையேற்று பொறுப் போடு போராட்டத்தை ஒத்திவைத் தோம். அதே பொறுப்போடு கூறு கிறோம், மக்களைப் பாதிக்கும் போராட்டங்களை அரசு தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மறைமுக தனியார்மயம் என்பது அரசின் கொள்கையாக இருக்கக் கூடாது. தொழிலாளர்களின் கோரிக் கை தொடர்பாக மானியக் கோரிக்கை யில் அறிவிப்பார்கள் என்று எதிர் பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தப் போராட்டத்திற்கு அர சாங்கப் போக்குவரத்து ஊழியர் சங்கத் தின் பொருளாளர் ஏ.ஆர்.பாலாஜி  தலைமை தாங்கினார். அரசுப் போக்கு வரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார், சங்கத்தின் பொதுச் செயலாளர் வி. தயானந்தம், நிர்வாகிகள் எம்.சந்திரன், பக்தவச்சலம் உள்ளிட்டோர் பேசினர்.