திருவண்ணாமலை, ஜூலை 12- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்வு நாள் கூட்டம் ஆட்சித் தலைவர் க.சு.கந்தசாமி தலைமையில் நடை பெற்றது. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சு.சரவணன் மற்றும் அலுவ லர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் நலச் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரமேஷ் பாபு பேசிய தாவது: மாவட்ட அரசு அலுவலகங்களில், மாற்றுத்திறனாளிகள் பயன்ப டுத்தும் வகையில் லிப்ட் அமைக்க வேண்டும், வட்டார அரசு அலுவல கங்களில் சாய்தள நடைபாதை அமைக்க வேண்டும், ஆரணி தச்சூர், மெய்யூர் விஸ்வந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மாற்றுத்திற னாளிகள், 100 நாள் வேலை திட்டத்தில் வேலை கேட்டு மனு கொடுத்து காத்தி ருக்கின்றனர். அவர்களுக்கு வேலை அட்டை வழங்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு, விலையில்லா ஆடு, தொகுப்பு வீடு, பசுமை வீடு போன்ற திட்டங்களில் 5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படு வதில்லை. 65 ஆயிரம் மாற்றுத்திற னாளிகள் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆண்டு ஒன்றுக்கு 50 நபர்களுக்கு கூட சுயதொழில் செய்ய வங்கிக் கடன் வழங்கப்படுவ தில்லை. 2016 ஆம் ஆண்டில் மாற்றுத் திறனாளி பென்ஷன் பெற ஆர்டர் பெற்றவர்களுக்கு இன்று வரை பென்ஷன் கிடைக்கவில்லை. மாவட்ட குறைதீர்வு கூட்டங்களில் கொடுத்த கோரிக்கை மனுக்கள் வட்டார அலுவலகங்களுக்கு வந்து சேருவதில் உள்ள சிக்கலை களைய வேண்டும். மேலும், மாற்றுதிறனாளிகளாக இல்லாதவர்களுக்கும், மாற்றுத்திற னாளி அட்டை பெற்றுத்தர முயற்சிக்கும் இடைத்தரகர்களை தடுக்க வேண்டும். கல்குவாரி அரு கில் வசிப்பதாகக் கூறி, மாற்றுத்திற னாளிகளுக்கு பட்டா வழங்கப்படா மல் உள்ளது. அங்குள்ள கல்குவாரி செயல்படவில்லை. எனவே, மாற்றுத் திறனாளிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளி களுக்கு வழங்கப்படும் அரசு இல வச பேருந்து அட்டையை பயன்ப டுத்துவதில் சிரமம் ஏற்படுவதால் கோட்டம் வாரியாக பேருந்து பாஸ் வழங்காமல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என பொது வாக அட்டை வழங்க வேண்டும். ரேஷன் கடையில் மாற்றுத்திறனாளி கள் தனியாகச் சென்று பொருட்கள் வாங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று பேசினார். இதற்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப் பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும் என்று தெரிவித்தார்.