சென்னை, செப்.18- பொதுமக்கள்–நாய் தொடர்பு மற்றும் பொதுசுகாதார பரிமாணங்கள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கு வதில் ஊடங்களின் பங்கு மிகமுக் கியமானது என்று நோய்தொற்று தடுப்பு நிபுணர் டாக்டர்.வி.ராமசுப் பிரமணியன் கூறினார். மனிதர்-நாய் மோதலை தடுக்க அறிவியல் தீர்வுகள்-ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகள் குறித்து சென்னை யில் புதனன்று (செப்.18) மனித-விலங்கு ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானி கள், நல அமைப்புகள் சார்பில் நடை பெற்ற கலந்துரையாடலில் டாக்டர்.வி. ராசுப்பிரமணியன் பேசுகையில், இந்திய சுற்றுச்சூழல் பின்னணியில் தெருநாய்கள் மனிதர்களின் வாழ்வியலில் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. மனிதர்-தெரு நாய் உறவுகளில் பெரும் பாலானவை சீரற்றதாக இருக்கிறது. தெருநாய் மற்றும் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களால் பொதுமக்கள் தாக்குதலுக்கு உள்ளா வது ஒருசிலநேரங்களில் ஊடகங்களில் மிகைப்படுத்தப்படுவதும் சிலநேரங் களில் கண்டுகொள்ளாதபோக்கும் இருக்கிறது. பொதுவாகவே நாய் பிரி யர்கள் தங்களை நாய்கள் கடிக்கா விட்டாலும் ரேபிஸ் தடுப்பு மருந்து (வேக்சின்) எடுத்துக்கொள்வது நல்லது. நாய்களைப் பராமரித்தல், பொதுவெளிகளில் உணவுக்கழிவு களை அகற்றுதல், நாய்களின் எண்ணிக் கையைக் கட்டுப்படுத்துதல், நாய் கடித்தலுக்கான தடுப்பு, பாதுகாப்பு அம்சங்கள், ரேபிஸ் தடுப்பு ஆகிய வற்றைப்பற்றிய விழிப்புணர்வு பொது மக்களுக்கும் அரசு நிர்வாகத்திற்கும் தேவைப்படுகிறது என்றார். இந்த கலந்துரையாடலை டாக் ஸ்டிரஸ்ட் வேல்டு வைடு, சாக்ரடஸ், சமயு, ரிமேக்கிங் ஒன்ஹெல்த் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தின. சாக்ரடஸ் நிர்வாகி அம்சுமன் தசரதி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
நாய்-மனிதர்கள் மோதலை தடுக்க முயற்சி
எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் அரசியல், சூழலியல் - தெருநாய்கள்-பொதுசுகாதாரம் பற்றிய ஆராய்ச்சி திட்டத்தின் முதன்மை ஆய்வாளர் கிருத்திகா சீனிவாசன் பேசுகையில், இந்தியா முழுவதும் பயணித்து தெரு நாய்களைப்பற்றிய ஒரு ஆய்வு நடத்தியுள்ளோம். தெருநாய்களுடனான மனித உறவு எப்படி இருக்கவேண்டும், நாய்களிடமிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வது எப்படி, ரேபிஸ்நோய் தொற்றிலிருந்து மனிதர்களும், நாய்களும் பாதிக்காமல் இருக்க மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை என்ன என்பது குறித்து பொது விவாதங்கள் நடத்தி வருகிறோம். மனித-நாய் மோதலை தடுப்பது, தவிர்ப்பது மட்டுமே எங்கள் நோக்கமாக உள்ளது. இதுகுறித்து ஊடகங்களுக்கும் அவற்றின் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். தெருநாய்களை கட்டுப்பாடுத்துவதில் அரசு உரிய கவனம் செலுத்தவேண்டும் என்று கூறிய அவர் 2 விழுக்காடு நாய்கள் மட்டுமே பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுகிறது. மனிதர்களோடு பலநூற்றாண்டுகாலமாக நாய்கள் ஒன்றிணைந்து வாழ்ந்துவருவதால் இதனுடனான மோதலை தவிர்க்கமுடியாது. மோதலை தவிர்ப்பதற்கு நாய்களை அழிப்பது தீர்வாகாது என்றார்.