tamilnadu

img

அரசூரில் கொட்டும் மழையில் உணர்ச்சிகர படத்திறப்பு நிகழ்ச்சி

உளுந்தூர்பேட்டை அக். 30-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அரசூர்  கிளை முன்னாள் செயலாளரும், கட்சியின் தீவிர விசுவாசியுமான தோழர் என்.சுப்பிர மணியனின் படத்திறப்பு நிகழ்ச்சி, கொட்டும் மழையில் உணர்ச்சிகரமாக நடைபெற்றது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன் படத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். ஒன்றுபட்ட தென்னாற்காடு மாவட்டத்தில்  அரசூரில் எண்பதுகளில் கட்சி துவங்கிய காலம் தொடங்கி இறுதிவரை கட்சியின் கவுர வத்தைப் பாதுகாப்பதில் முன்னணி ஊழிய ராக திகழ்ந்த தோழர் என்.சுப்பிரமணியன். அரசூரில் செயல்பட்டுவந்த ஆரம்பப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக மாற்ற வும், தலித் மக்களுக்கான குடியிருப்புகளை கொண்டு வரவும், சுடுகாட்டுப்பாதை அமைத்திடவும், குடிநீர் பிரச்சனையை தீர்த்திடவும் குறிப்பாக தீண்டாமைக் கொடு மைக்கு எதிராகவும் தொடர் போராட்டங்கள் நடத்தி வெற்றி பெற காரணமாக இருந்தவர். பள்ளிப்படிப்பு இல்லாவிட்டாலும் கட்சிக்கு  பெருமை சேர்க்கும் விதத்தில் இறுதிவரை  செயலாற்றிய தோழர் என்.சுப்பிரமணியனின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும் என்று ஜி.ராமகிருஷ்ணன் புகழஞ்சலி செலுத்தினார். கடலூர் மாவட்ட மூத்த தலைவர் எஸ். துரைராஜ் கட்சிக் கொடியை எழுச்சி முழக் கங்களுக்கிடையே ஏற்றி வைத்து அரசூர் கூட்டுச் சாலையில் வாகன விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுத்திட மேம்பாலம் அமைத்திட போராடிய தோழர் சுப்பிரமணியன் அதற்காகவே தியாகம் செய்துள்ளார் என நினைவு கூர்ந்து உரை யாற்றினார். 

கிளைச் செயலாளர் ஜி.எஸ்.ரஞ்சித்  தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டி.கமலநாதன் வரவேற்றார். மூத்த தலை வர் கே.எம்.ஜெயராமன், மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை,  செயற்குழு உறுப்பினர்கள் டி.எம்.ஜெய்சங்  கர், எம்.ஆறுமுகம், எம் செந்தில், ஒன்றியச்  செயலாளர் எஸ்.மணிகண்டன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளா ளர் அ.மா.இளங்கோவன் ஆகியோர் உரை யாற்றினர். மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஏ.சக்தி, அ.வீராசாமி, ஜெ. ஜெயக்குமார், இ.  அலமேலு, ஏ.தேவி, டி.வெங்கடேசன் மற்றும்  பொறியாளர் தனபால் உள்ளிட்ட ஏராளமா னோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.  புதுவை சப்தர்ஹஷ்மி கலைக்குழுவின ரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி யின்போது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகியாக இருந்து சாதி ஆதிக்க  சக்திகளால் கொல்லப்பட்ட சேட்டுவின் தாயா ருக்கும் மற்றும் தோழர் என்.சுப்பிரமணி யனின் துணைவியாருக்கும் ஜி.ராமகிருஷ் ணன் சால்வை அணிவித்து கவுரவித்தார்.