tamilnadu

மின்னஞ்சலில் மட்டுமே ரசீது: பிஎஸ்என்எல் திட்டம்

வேலூர், ஜூன் 7- பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு ஜூன் மாதத்தில் இருந்து அச்சடிக்கப்பட்ட ரசீதுகள் அனுப்பப்பட மாட்டாது என்றும், மின்னஞ்சலில் மட்டுமே ரசீதுகள் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிஎஸ்என்எல்லின் வேலூர் தொலை தொடர்பு மாவட்ட முதன்மை பொது மேலாளர் கே.வெங்கட்ரா மன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு இந்த மாதத்தில்  இருந்து அச்சடிக்கப்பட்ட ரசீதுகள் அனுப்பப்படமாட்டது.  அதற்கு பதிலாக வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு ரசீதுத் தொகை செலுத்துவதற்கான கடைசி தேதி, அத்துடன் ரசீது பதிவிறக்கம் செய்து கொள்வ தற்கான இணையதள முகவரி குறுஞ்செய்தியாக அனுப் பப்படும். வாடிக்கையாளர் பதிவு செய்துள்ள மின்னஞ்சல் முக வரிக்கு ரசீது அனுப்பப்படும். மின்னஞ்சல் மூலமாக பெறப்ப டும் ஒவ்வொரு ரசீதுக்கும் ரூ. 10 தள்ளுபடி செய்யப்படும். எனவே, தங்களது செல்போன் எண்ணையோ, மின்னஞ்சல் முகவரியையோ பதிவு செய்யாத வாடிக்கையாளர்கள் உட னடியாக அருகே உள்ள வாடிக்கையாளர் சேவை மையத்  தில் தொடர்பு கொண்டு தங்களது செல்போன், மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.