சென்னை, செப்.14- உணவகங்களில் ஜி.எஸ்.டி.வரி முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிர மராஜா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
கோயம்புத்தூர் கொடிசியாவில் செப்டம்பர் 11 அன்று ஒன்றிய நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற ஜி.எஸ்.டி தொழில் வணிக கலந்துரையாடல் நிகழ்ச்சியில், கோவை அன்னபூர்ணா சீனிவாசன், உணவுப் பண்டங்களின் மீதான ஜி.எஸ்.டி வரியை ஒருமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் வழக்கு மொழியில் அனைவரும் புரிந்து கொள்ளும்படி எளிமையாக பேசி யிருந்தார்.
கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உணவுப் பொருட்கள் மீதான வரியை முழுமையாக நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. கடந்த 20.8.2024 அன்று தில்லியில் நிதி அமைச்சரை நேரில் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூட, உணவகங்களில் ஜி.எஸ்.டி வரி முரண்பாடுகளை நீக்க கோரிக்கை வைக்கப்பட்டது. நிதியமைச்சர் அது குறித்து பரிசீலிப்பதாக உறுதி அளித்தார்.
அதே கருத்தைத்தான் கோவை அன்னபூர்ணா சீனிவாசன் அரங்கத் தில் பேசியிருந்தார். அதில் பேசிய தொனி முறை மாறுபட்டிருக்கலாமே தவிர, கருத்து ஒன்றுதான். எப்படி இருப்பினும் இதை யாரும் அரசியலாக்கக் கூடாது என்பதையும், இதனால் உணவக வணிகர்களுக்கு ஏதேனும் பாதிப்பு என்றாலும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு களம் இறங்கத் தயங்காது என்பதை கண்டிப்புடன் பதிவு செய்ய விரும்புகிறோம்.
வணிகம் என்பது ஏதோ அடிமைத் தொழில் என யாரும் கருதிவிடக் கூடாது என்பதையும், வணிகர்களுக் கான அதிகாரத்தை வணிகர்கள் கை யில் எடுக்கும் நாள் வெகு தொலை வில் இல்லை என்பதையும், பேரமைப்பு பதிவு செய்வதோடு, அரசியல் உள்நோக்கம் இன்றியே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு செயல்படும் என்பதோடு, கோவை அன்னபூர்ணா சீனிவாசன் வெளியிட்டுள்ள கருத்தின் அடிப்படையில், எவ்வித அரசியலும் யாரும் செய்யக்கூடாது என்பதையும் பேரமைப்பு திட்டவட்டமாக தெரி வித்துக் கொள்கின்றது. வணிகர் களுக்கான இடையூறுகள், தடை களை தகர்த்தெறிய பேரமைப்பு கடமைப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.