சென்னை:
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மட்டும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படும். இதற்கான தேர்தல் அறிவிக்கை டிசம்பர் 06-ஆம் தேதி வெளியிடப்படும். மேலும் அன்றைய தினம் முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும். வேட்புமனு தாக்கல் செய்ய இறுதிநாள் டிசம்பர் 13-ஆம் தேதியும், வேட்புமனு ஆய்வு 16-ஆம் தேதியும், வேட்புமனு திரும்பப்பெறுவது 18-ஆம் தேதியும் நடைபெறும்.
வாக்குப்பதிவு காலை 7 மணி தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 02.1.2020-ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்று அறிவித்தார். உள்ளாட்சி தேர்தலில் 3..31 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர்.
ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்புற உள்ளாட்சிகளான மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஆகியவற்றிற்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
கடந்த 3 ஆண்டுகளாக தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் டிசம்பர்13 ம் தேதிக்குள் தேர்தல் அட்டவணையை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது அரசியல் கட்சி