tamilnadu

பேருந்து சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி

போரூர்,மார்ச் 8- கோயம்பேடு பேருந்து நிலைய 2 வது பிளாட்பா ரத்தில் இருந்து ஞாயிறன்று (மார்ச் 8) அதிகாலை வெளி யூர் பேருந்து ஒன்று கிளம்பிச் சென்றது. அப்போது அங்கு 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர்  பேருந்து சக்கரத்தில் சிக்கிக்கொண்டார். இதில் அவரின் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார். இது குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுக் கப்பட்டது. காவல்துறை யினர் சம்பவ இடத்திற்கு வந்து முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த முதியவர் யார்? அவர் எந்த பகுதியைச் சேர்ந்தவர்? என்பது குறித்து  விசாரணை நடத்தி வருகின்ற னர். இது தொடர்பாக பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

;