தோழர் புத்ததேவ் மறைவு: எடப்பாடி பழனிசாமி, கி. வீரமணி இரங்கல்!
சென்னை, ஆக. 9 - தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா மறை வுக்கு, திராவிடர் கழகத் தலைவர் கி. வீர மணி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் இரங்கல் குறிப்பில்,“ மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முத லமைச்சர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பின ருமான தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு துயருற்றேன். அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தின ருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
சமத்துவ சமுதாயம் காண அவர் எடுத்து முன்னெடுப்புகளும், மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பெரும்பங்கும் என்றைக்கும் நிலைத்து நிற்கும்” என்று தெரிவித்துள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “மேற்கு வங்கத்தில் அதிக காலம் முத லமைச்சராக இருந்த தோழர் ஜோதி பாசு அவர்களுக்குப் பிறகு, 2000 முதல் 2011ஆம் ஆண்டு வரையில் இரண்டு முறை மேற்கு வங்கத்தின் முதலமைச்சராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராகவும் திகழ்ந்த புத்ததேவ் பட்டாச்சார்யா அவர்கள், தமது 80-ஆம் வயதில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். முற்போக்கு இயக்கத் தின் மூத்தத் தலைவர்; சிறந்த கவிஞ ராகவும், இலக்கிய ஆளுமையாகவும் விளங்கியவர் என்று கூறியுள்ளார்.
முத்தமிழ் முருகன் மாநாடு ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை, ஆக. 9 - பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு ஒருங்கிணைப் புக் குழு மற்றும் 11 செயற்பாட்டு குழுக்க ளின் பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநாட்டுப் பணிகள் தொடர்பாக விரிவான ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. பின்னர் அமைச்சர் சேகர் பாபு நிருபர்களிடம் கூறியதாவது: அனைத் துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட் 24 மற்றும் 25 தேதிகளில் பழனியில் நடை பெறுகிறது. இம்மாநாட்டிற்கு வெளிநாடு களிலிருந்து 131 முக்கிய பிரமுகர்கள் மற்றும் தமிழ்நாட்டை தவிர இதர மாநிலங் களில் இருந்து 526 முக்கிய பிரமுகர்கள் மற்றும் முருக பக்தர்கள் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றார்.
2030-க்குள் 30 விழுக்காடு பேருந்துகள் மின்சாரமயம்
அமைச்சர் தகவல்
சென்னை, ஆக. 9- தமிழ்நாட்டில் 2030-ஆம் ஆண்டுக்குள் 30 விழுக்காடு பேருந்துகள் மின்சாரமய மாக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். தில்லியில் பேட்டரி வாகனம் தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாடு இந்தியா வின் முன்னணி மின்சார வாகன உற்பத்தி மையமாக திகழ்கிறது. ரூ. 24 ஆயிரம் கோடி அளவில் புரிந்துணர்வு ஒப்பந்தங் களில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் 48 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும்” என்றார்.
பெரியார் பல்கலை. துணைவேந்தர் மீது
குற்றவியல் நடவடிக்கை
சேலம், ஆக. 9 - சேலம் பெரியார் பல் கலை. துணைவேந்தர் ஜெக நாதன் மீது குற்றவியல் நட வடிக்கை தொடர தமிழ்நாடு தொழிலாளர் நல ஆணை யம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம், பெரி யார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் 208 தற்காலிகப் பணியாளர் களை பணி நிரந்தரம் செய் வது தொடர்பாக, பெரி யார் பல்கலைக் கழக நிர்வா கத்திற்கும் - பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்துக்கும் இடையே ஏற்பட்டிருந்த தொழில் தகராறு, அர சாணைப்படி சென்னை தொழில் தீர்ப்பாயத்தின் தீர்விற்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையிலேயே, தொழிற் தகராறுகள் சட்டத் தின் சரத்துக்களை பின் பற்றாமல் பல்கலைக்கழக நிர்வாகம் 4 தொழிலாளர் களை 28.1.2023 அன்று நிரந்த ரப் பணி நீக்கம் செய்துள் ளது. இந்த விவகாரத்தில் துணை வேந்தர் ஜெகநாதன் குற்றமிழைத்தவர் என அரசாணை வெளியிட்டு குற்றவியல் வழக்கு தொடர உத்தரவிடப்பட்டு உள்ளது.