tamilnadu

img

சென்னைக்கு அருகே நிலநடுக்கம்  

சென்னையை அடுத்த நெல்லூரில் சனிக்கிழமை நள்ளிரவு லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.  

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே நெல்லூரில் சனிக்கிழமை நள்ளிரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

திருப்பதியில் இருந்து வடகிழக்கே 85 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம், நிலத்திற்கு அடியில் 20 அடி ஆழத்தில் உருவானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.  

இதையடுத்து நெல்லூரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சென்னையிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.